மகிந்தாவின் காலனிக்குள் உட்செல்லவோ வெளியேறவோ அனுமதி இல்லை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
05 Apr 2013
- Hits: 1431
காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தாருங்கள் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த வடக்கிலிருந்து வரவிருந்த மக்கள் வவுனியாவில் வைத்து பாதுகாப்பு தரப்பினரின் கூட்டு முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 5 ம் திகிதி இரவு வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து சுமார் 700 பேர் வரை 10 ற்கும் மேற்பட்ட பேருந்துகளில் கொழும்பு நோக்கி புறப்பட ஆயத்தமான மக்களை வவுனியாவிற்கு அப்பால் பாதுகாப்பு தர முடியாது என்றும் அனர்த்தம் இருப்பதாகவும் 6 ம் திகதி காலை புறப்படுமாறு கூறி மக்களை பொலீசார் தடுத்து நிறுத்தினர்.
மீண்டும் ஜெனீவா மீட்டுத்தருமா எம் உரிமைகளை?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
16 Jan 2014
- Hits: 1549
கடந்த முறை ஜெனீவாவில் இலங்கை குறித்த மனித உரிமை மீறல்கள் கூட்டம் நிகழ்ந்தது குறித்து "போராட்டம்" பத்திரிக்கையில் வந்த ஆக்கம் இது. வருகின்ற மாதத்தில் மீண்டும் ஜெனீவாவில் இலங்கை குறித்த மனித உரிமை மீறல்கள் கூட்டம் நிகழவுள்ளது. இலங்கை குறித்து ஜெனீவாவில் எத்தனை கூட்டம் நிகழ்ந்தாலும், அதன் ஒரே நோக்கம் இலங்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜரோப்பிய வல்லரசுக்களின் பொருளாதார நலன்களின் அடிப்படையிலானதே ஒழிய, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்த கரிசனையின் பாற்பட்டதல்ல என்பதனை இந்த ஆக்கம் மிகவும் தெளிவாக விவரிக்கின்றது.
இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.
சிறுநீரக நோய்த்தாக்கம் வெளிவரும் அதிர்ச்சிகள்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
24 Dec 2013
- Hits: 1514
சூழலில் பெருகிவரும் நச்சுப்பதார்த்தங்கள் இடம்பெயரும் விவசாயிகள்!
வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் பரவலாக சிறுநீரக நோய் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, இந்நோய் தற்போது வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பெரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்து மெல்ல மெல்ல முழுநாட்டையும் ஆக்கிரமிக்கும் சமூக அவலமான சிறுநீரக நோய் தொடர்பாக தெளிவான அரசியல் ஆய்வுடன் இதற்கு எதிராக மக்களைத்திரட்ட வேண்டியது இடதுசாரிகளின் கடமையாகும். அதற்கான முதற்படி கலந்துரையாடலே ஆகும்.
புல்லுருவி விதைகள் சில தம் ஆணவக்குறி நீட்டி
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
12 Nov 2013
- Hits: 1575
உயிர்ப் பலிகளினால்
இயற்கையை அழித் தொழிக்க
அறிவிலி அரசியலில்
கங்கணம் கட்டி நிற்கும்
பாரதத் தமிழ் நாட்டின்
கூடங்குள அணுமின்னிலை முன்
அல்லும் பகலுமாய்
ஆயிரம் மக்கள் கூடி
இலங்கை வரையான
பல்லாயிரம் மக்களின்
எதிர்கால இயல் வாழ்வை
மீட்கப் போராடும் நிலையில்...
வங்கக் கடலோடிகளின் கண்ணீர்: வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
09 Nov 2013
- Hits: 1360
கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.
உலகப் பொருளாதார நெருக்கடி
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
21 Oct 2013
- Hits: 1501
ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.
சுகாதாரம் எந்தக் கடையில் கிடைக்கும்? தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் சுகாதார வசதிகள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
20 Oct 2013
- Hits: 1227
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமையோ அல்லது காணி உரிமையோ இல்லை. இதை தட்டிக்கேட்க மலையக தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மந்திரிமார்களுக்கு எவ்வித திறமையோ அல்லது அறிவோ இல்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களிலும் கூட்டங்களிலும் சிங்கங்களைப் போல் கர்ச்சிப்பதை மட்டும் காணமுடிகின்றது. தங்களது உதிரத்தையும் வியர்வையையும் சிந்துகின்ற மக்கள் தொடர்ந்தும் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து கொண்டே வாழ்வதா?
வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம் 03
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
19 Oct 2013
- Hits: 2396
உண்மை தெரிந்து கொள்வதற்காக அல்ல, உண்மையைக் கொண்டு வாழ்வதற்காகவே மனிதன் போராடுகின்றான். மனித வாழ்வை சுற்றிய நிகழ்வுகளையும், காரணங்களையும் தீர்மானிப்பது எது என்று தேடிய மனிதன், எது உண்மை என்று தேடினான்? இந்த வகையில் மார்க்ஸ் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படித் தேடிய மார்கஸ் 1837 ஆண்டு எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். இப்படி மார்க்ஸ் தேடிய உண்மையை இறுதியில் தெருவில் (மக்கள் மத்தியில்) இருந்தே கண்டெடுத்தார். இப்படி மார்க்ஸ் கண்டெடுத்தவைதான், சமூக விஞ்ஞானமான மார்க்சியமாகும். இப்படி மக்களின் வாழ்வில், அதன் போராட்டத்தில் இருந்து உருவான தத்துவமே மார்க்சியம் என்பதால், இது இறுக்கிப் போன கோட்பாடு அல்ல. மக்களில் இருந்து அன்னியமான வரட்டுவாதமுமல்ல. மார்க்சியம் மக்களின் வாழ்விலும், அதன் உணர்விலும் இருந்து அன்னியமான தத்துவமல்ல.
வட-கிழக்கில் பெண்கள் ஆயுதமேந்தியமை முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியது.
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
06 Oct 2013
- Hits: 1606
"வடக்கு கிழக்கில் பெண்கள் மிக அவலமான ஒடுக்குமுறைக்கும் சீரழிவிற்கும் ஆளாகி உள்ளார்கள்."
வடக்கு-கிழக்கில் பெண்கள் போராளி குழுக்களில் இணைந்து ஆயுதமேந்தி வீரத்துடன் ஆண்களுக்கு நிகராக, ஆண்களுடனே மோதி இருந்தார்கள். இந்நிலைமை சமூகத்தில் பெண்கள் தொடர்பான முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடதக்கது. ஆனால், அவர்கள் மீதும் இன்று அதிகமான அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் யுத்தத்தின் போது கீழ்த்தரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படடதாக செய்திகள் வெளியாகின. வடக்கு-கிழக்கில் நடைபெறுபவற்றில் பெருமளவிளானவை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை என சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல தெரிவித்தார். போராட்டம் பத்திரிக்கைகாக திமுது ஆட்டிகல வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவிபரம் பின்வருகிறது.
நாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
-
04 Oct 2013
- Hits: 1257
மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.