வல்லானின் குப்பைகள் வறியவனின் தோட்டத்தில்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
08 Jan 2014
- Hits: 1496
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோரும் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைவீதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எந்தவகையிலாவது உழைத்த பணத்தைக் கொண்டு துணிமணிகள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் கொலன்னாவ பகுதியில் சம்பவமொன்று நடந்து கொண்டிருந்தது. கொலன்னாவையையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாறடித்துக் கொண்டிருந்த குப்பைமேட்டுக்கு போகும் வழியை மறித்து அப்பிரதேச மக்கள், அங்கே குப்பை கொட்டுவதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.
ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
17 May 2013
- Hits: 2382
இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.
மே தினம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
30 Apr 2014
- Hits: 1417
அனைத்துமே போராட்டங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. வரப்பிரசாதங்களால் அல்ல. மே தினம் சிக்காகோ பேரெழுச்சியின் விளைவாக இருந்தாலும் அது இரத்தக் கரைகளுடனும் போராட்டங்களுடனும் தூக்குக் கயிற்றின் முடிவிலுமே ஆரம்பமானது. இதற்கு முன்பும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றான்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 -18 மணித்தியாலங்கள் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் இதற்கெதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்க கோரிக்கையாக இருந்தது. 10 மணித்தியால வேலை என்பதாகும்.
இதே போராட்டம் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஸ்யா என இன்னும் பல நாடுகளிலும் நடைபெற்றன. அனைத்துத் தொழிலாளர்களினதும் ஓரே கோரிக்கையாக இருந்தது வேலை அதற்குப்பின்னரான ஓய்வு ஆனால் அது சிக்காகோவில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகத்தான் நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம் 8 மணித்தியாலங்களாக ஆக்கப்பட்டது.
மேதினத்தில் வர்க்கத்தை ஆழமான கருத்தாடலுக்கு இட்டுச் செல்வோம்: தோழர் சமீர கொஸ்வத்த
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
29 Apr 2014
- Hits: 1392
இன்று நினைவு கூறப்படும் மே தினம் அதன் உண்மையான அர்த்தத்தோடு நினைவு கூறப்படுவதில்லை. அது ஒரு போலியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் தனித்தனியாக மே தினத்தை நினைவு கூறுகின்றன. அதேபோல், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாக இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடியுமென்றும் சில செஞ்சட்டை மேதாவிகளும் கூறுகின்றனர். இந்த போலி தர்க்கங்களுக்குப் பதிலாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடும் அரசியலை சமூகமயப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மௌனம் காக்கும் நேரமா? குரலெழுப்பும் நேரமா?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
07 Feb 2014
- Hits: 1304
நீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.
1971, மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் சென்ற கற்பிதங்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
07 Feb 2014
- Hits: 1427
1971 ஏப்ரல்மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு அறிவித்தல அடிக்கடி வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது. இந்நாட்டு மக்கள் என்றுமே எதிர்பார்த்திராத செய்தி அது. என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. "நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையங்களை தாக்கி அந்த பிரதேசங்களில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போரடி வருகிறது. அவர்களை முறியடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்ய தயாரக உள்ளதாக" அந்த செய்தி மேலும் கூறியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு இணைவோம்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
01 Feb 2014
- Hits: 1237
அது ஒரு உல்லாசப் பயணிகள் நாடி வரும் அழகிய கடற்கரை. இரு உல்லாசப் பயணிகள் அன்று அங்கே தற்செயலாய் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவர் நோர்வேஜியர் மற்றவர் ஆங்கிலேயர். நோர்வேஜியருக்கு நீண்டகாலமாக இருந்த ஆசைகளிலொன்று, தான் இந்திய பெருநாட்டை ஒருமுறையாவது சுற்றிப் பார்த்துவிடுவதென்ற சிறுவயதிலிருந்தே வளர்ந்து விட்டிருந்த பெருவிருப்பு. நிறையவே இந்தியாவைப் பற்றி தான் கேள்விப்பட்டவற்றை தரிசிக்க வேண்மென்ற ஆவல் அவருக்கிருந்தது. தனது இளவயதில் தனது வருமானத்திற்கு கட்டுப்படியாகாதிருந்தும் தனது இந்தக் கனவை நிறைவேற்றும் எண்ணத்துடன், தான் சிறிதுசிறிதாக சேமித்து வைத்திருந்த பணத்துடன் தனது காதலியுடன் அவர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
காலாகாலமாக ஏமாற்றப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
16 Jan 2014
- Hits: 1241
மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்;பந்தமான கூட்டு உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடும் தொழிற்;சங்க கூட்டுக்கமிட்டிக்குமிடையில் நடைபெற்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம், ஏனைய தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு வருகின்றனர்
மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
07 Nov 2013
- Hits: 2389
மனிதர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களைப் பெறுவதற்கான மனித உழைப்புக்குள்ளும், நுகர்வுக்குமுள்ளுமான முரண்பாடுகள் பற்றி முரணற்ற வகையில் விளக்குகின்றது மார்க்சியம். உழைப்பு மற்றும் நுகர்வில் இருந்து மனிதனை அந்நியமாக்கும் முரண்பாடுகள், மனித உறவுகளை வர்க்கரீதியான உறவாக்குகின்றது. மனிதனுக்கு எதிரான இந்த தனிவுடமை சமூக அமைப்பை, மார்க்சியம் தலைகீழாகப் புரட்டிக் காட்டுகின்றது. சாராம்சத்தில் மனித வாழ்விற்கான வர்க்கப் போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டுவதால், மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமே ஒழிய, வெறும் அறிவு சார்ந்த தத்துவமல்ல. வர்க்கப் போராட்டத்தின் மீதான இயங்கியல் தான் மார்க்சியம். வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைக்கும் போராட்டமாகவே வாழ்வுக்கான மனிதப்போராட்டம் இருப்பதை, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைத்து அமைப்பாக்கி இருக்கின்றது.
மே தினம் தொழிலாளருக்காகவா? கட்சி ஆதரவாளர்களுக்காகவா?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
-
01 May 2013
- Hits: 1397
மே தினம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் சென்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தினமாகும். சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினமாகும்.1886 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட சதுக்கத்தில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் தமக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோஷமெழுப்பினார்கள்.
இந்த கோஷத்தைக் கண்டு கொதித்தெழுந்த முதலாளிகள் தமது ஏவல் நாய்களை அவிழ்த்துவிட்டனர் துப்பாக்கியைக் கையிலேந்திய அந்த ஏவல் நாய்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அவ்விடத்திலேயெ சுருண்டு விழுந்த பல தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்தச் கதுக்கமே இரத்தக்காடாகியது. அன்றைய தினம் உயிர் நீத்த தொழிலாளர்களை உலகம் பூராகவுமுள்ள தொழிலாளர்கள் ஒன்று சேரும் தினமாகும்.