மனித உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்ற அறிவே மார்க்சியத்தின் சாரம் (மார்க்சியம் 08)
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
-
28 Apr 2015
- Hits: 1812
உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது மனிதன் வாழ்கின்ற போது, தனிவுடமை வீரியம் பெற்று மனித இனத்தை நுட்பமாக அடிமை கொள்வதே நவீன சமூகமாகின்றது. மனிதன் இந்த சமூக அமைப்பில் தன்னிலை அறியாது வாழ்தல் முறையே, தனிவுடமை அமைப்பின் சாரமாகும்.
மனித உரிமை தினத்திலே கடத்தப்பட்ட செயல் வீரர்கள்.
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
-
17 Apr 2015
- Hits: 1129
2011ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களது அரசியல் கடமைக்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்கள். அப்படி புறப்பட்டுச் சென்றவர்கள் இன்றுவரை திரும்பவில்லை. முதலாளித்துவ அரசாங்கத்தின் ஏவலாளர்கள் அவர்களை கடத்திச் சென்று விட்டார்கள்.
சிவன் விடு தூது....... (சிறுகதை)
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
-
11 Feb 2014
- Hits: 1264
எதிர்பாராமல் வந்த பயணம். அப்படி இப்படி என்று ஒரு மாதிரி வெளிக்கிட்டுப் புறப்பட்டு வந்து விட்டேன். மூவாயிரம் அடி உயரத்துக்கு மேலே பிளேன் பறந்து கொண்டிருந்தது. ஏதோ நல்ல காலம், யன்னல் அருகே இடம் கிடைத்ததாலும் எனது பக்கத்தில் யாரும் இல்லாதனாலும் பெரிய வசதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. வெளியே எட்டிப்பார்க்கிறேன் எல்லாம் நல்ல வெண்பஞ்சு மேகம். போட்டோ எடுக்கப் பாவிக்கிற லைற்றுக்கள் பூட்டிய மாதிரி நல்ல வெளிச்சம். பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் ரம்மியமாகவும் இருந்தது. அப்படியே நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். பஞ்சு மேகங்களுக்குள்ளே மிரிச்சுக் கொண்டு நடக்க சிலவேளை கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்தாலும், ஏதோ நல்ல மணற்தெருவிலே வெறுங்காலோடு நடப்பது போன்று... நடக்க ஆசையாக இருந்தது.
ஆசியாவின் ஆச்சரியம்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
-
26 Jan 2014
- Hits: 1182
விடைபெற்றுச் செல்லும் 2013 புதிய செய்திகளையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு விடைபெற்றுச் செல்கிறது. இலங்கையிலே CHOGMஒரு சர்வாதிகாரத்திற்கு மகுடம் சூட்டியதோடு அதற்கான செலவை நாட்டு மக்களின் தலையில் சூடிவிட்டு நடையைக் கட்டிவிட்டது. அனைத்து சர்வாதிகார, முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களும், காலனித்துவ எஜமானர்களும் ஆசி வழங்கி விட்டு சென்று விட்டார்கள்.
களியாட்டங்களில் குதூகலித்த மக்கள், செய்த தவறுக்காக தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தேர்தலை நடத்தும் ஒரே நாடான இலங்கையின், வடக்கு மக்கள் தாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். அரசாங்கமோ தேர்தலை கொடுத்தது. இனவாதம் நன்றாகவே விலைபோன தேர்தலில் அதிகார வர்க்கத்தோடு இன்னொரு குழுவையும் மக்கள் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது தங்களை ஆள்வது யார் என்று தெரியாத நிலையில் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் ஆள்கிறதா, ராஜபக்ஷ ஆள்கிறாரா அல்லது விக்னேஸ்வரன் குழு ஆள்கிறதா என்பதை தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
"போராட்டம்" ஜனவரி இதழ்-08 வெளிவந்து விட்டது
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
-
18 Jan 2014
- Hits: 1464
இந்த இதழின் உள்ளே...
- மக்கள் உரிமைகளுக்கு ஆபத்து!
- இடதுசாரிய கருத்தாடலுக்கு உயர்ந்த வரவேற்பு
- அரசாங்கம் அரத்தை நக்கும் பூனையைப் போன்றது
- வன்னி நிலம் யாருக்கு?
- சம சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உண்ணாவிரதம்