Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாத்தளையில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி

மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மாத்தளையில் 2015.03.01 (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்தியிருந்தது.

இவ்வார்ப்பாட்டபேரணிக்கு புதிய ஜனநாயக மா.லெ கட்சி இமுன்னிலை சோசலிக்கட்சி போன்ற  இடதுசாரிக்கட்சிகளும் அடையாளம், மொன்லார், மலையக சமூக ஆய்வு மையம் போன்ற சிவில் அமைப்புகளும் பல இளைஞர் அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. 20பேர்ச் காணியுரிமை, கிராமிய கட்டமைப்புடனான தனி வீடு, வாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளுடன் மனிதர் தான் மனிதர் தான் நாங்களும் மனிதர் தான், வேண்டும் வேண்டும் 20 பேர்ச் காணி வேண்டும் என்ற பல்வேறு கோசங்களுடன் மக்கள் ஊர்வலமாக சென்றனர். மாத்தளையில் உரிமைக்காக மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்று கூடிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.