Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புலோலியில் எம்.சியின் நினைவுகளை பகிர்தல் (படங்கள்)

நேற்று 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் யாழ். புலோலி சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்ற மன்ற சனசமூக நிலைய முன்றலில் அண்மையில் மறைந்த தோழர் எம்.சியின் நினைவுகளை பகிர்தலுடன், எமது சமூகத்தில் நிலவும் சாதி ஒடுக்குமுறை மற்றும் சமய, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் எழுதிய கவிதைகள் மற்றும் ஆக்கங்களின் தொகுப்பான ”ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை..” நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எண்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.  வி.ஜி.தங்கவேல் (சமாதான நீதவான்), தோழர் வன்னியசிங்கம், க.கருணாமூர்த்தி (பிரதி அதிபர், யா/வேலாயுதம் மகாவித்தியாலயம்) ஆகியோர் உரையாற்றினர்