தோழர் குமார் குணரட்ணம் விடுதலை கோரி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2015
-
06 Nov 2015
- Hits: 408
இன்று (06.11.15) மதியம் 1.00 மணியளவில் லண்டனில் உள்ள இலங்கை தூதரலாயத்திற்கு முன்பாக தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோசங்கள் முழங்கப்பட்டன.
குமார் குணரட்னத்தை உடனடியாக விடுதலை செய்!
குமார் குணரட்னத்தின் அரசியல் செய்யும் உரிமையை உறுதி செய்!
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!
அடக்குமுறை காரணமாக புலம் பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!
கூறியது நல்லாட்சி, ஜனநாயகம் நடத்துவதோ மகிந்த ஆட்சி!