Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கோட்டையில் சத்தியாக்கிரக போராட்டம்!

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்தும் நடவடிக்கையினை எதிர்த்து, அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி; இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக மௌனப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கோகாலையில் உள்ள குமாரின் வீட்டில் சுகவீனமுற்றுள்ள தாயாரை பார்வையிட வந்திருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குமாரை விடுவிக்க கோரி கடந்த 5ம் திகதி முதல் இலங்கை முதல் லண்டன், இத்தாலி, பிரான்ஸ் வரை பல போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுவிற்சலாந்து, டென்மார்க், நோர்வே, கனடா நாடுகளிலும் குமாரின் விடுதலைக்காகவும் அவரின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.