Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு எதிராக பெரும் ஆதரவுடன் தொடரும் சத்தியாகக்கிரக போராட்டம்...

கடந்த 13 நவம்பர் முதல் குமார் குணரத்தினத்தை நாடு கடத்த எடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று 12 நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. போராட்டத்தில் பல அரசியல் கட்சிகள் தொழிற்சங்க தலைவர்கள் தினமும் கலந்து கொண்டதுடன் பெரும் அளவிலான உழைக்கும் மக்கள் இரவு பகலாக பங்குபற்றி தமது ஆதரவினை இந்தப் போராட்டத்திற்கு வழங்கி வருகின்றனர். இன்று குமாருடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் 1985 இல் பொறியியல் கற்ற பொறியியல்ளாலர்கள் கலந்து கொண்டு குமார் குணரத்தினத்தின் குடியியல் உரிமையினை உறுதி செய்யும் படி அரசினை வலியுறுத்தினார்கள்.