Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!

டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!

டென்மார்க் சம உரிமை இயக்கத்தினால் சனிக்கிழமை (19.05.2018) கொல்ஸ்ரபோ நகரில் ஒன்று கூடல் ஒன்று நடாத்தப்பட்டது. இந்த ஒன்று கூடல் நிகழ்வில் பல தமிழ், சிங்கள மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையினையும் வளர்தெடுப்பதே இந்த ஒன்று கூடலின் முக்கிய நோக்கமாகும். கலை நிகழ்வாக சிங்கள தமிழ் பாடல்கள் இடம்பெற்றன. 

சுவையான உணவு, தேனீர், சிற்றூண்டிகள், சிறுவர்களின் விளையாட்டு என ஒன்று கூடல் நிகழ்வு கூடியிருந்த மக்களுக்கிடையிலான நல்ல புரிந்துணர்வோடு சிறப்பாக நிகழ்ந்தது. 

 

சமஉரிமை இயக்கம்

டென்மார்க்.

 

படங்கள் இணைப்பு

படங்களின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்