Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

2வது தேசிய மாநாடு - முன்னிலை சோசலிச கட்சி (படங்கள்)

நேற்று காலை (01) 10.00 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியின் 2வது தேசிய மாநாட்டின் கட்சி உறுப்பினர்களிற்க்கான அமர்வு கொழும்பு சுகதாச விளையாட்டரங்கின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

2வது மாநாட்டின் மையப்பொருள் "நவ தாராளமய திட்டத்திற்கு எதிரான சோசலிசத்திற்க்காக... வர்க்கத்திற்கொரு கட்சி" ஆக அமைந்திருந்தது. இந்நிகழ்வானது கட்சியின் பொது செயலாளர் சேனாதீர குணதிலக, அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் தலைமையில்; மாநாட்டு செயலாளர்கள் புபுது ஜயகொட, சமீர கொஸ்வத்த மற்றும் ஜூட் சில்வா புள்ளே வழிகாட்டலில் இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநாடு தொடர்பான அரசியல் திட்டம் ஒன்றினை தாயரிக்கும் பொருட்டு கலந்தாய்வுகள் மற்றும் பல முன்மொழிவுகள் உறுப்பினர்களின் கருத்துக்காக முன்வைக்கப்பட்டன.

மாநாட்டிற்கு முன்னராக பழைய மற்றும் புதிய தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்ட முக்கிய கலந்துரையாடல்கள் விவாதங்கள் நடைபெற்றிருந்தன. அவற்றினை மூன்று புத்தகங்களாக தொகுத்து இந்த மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாநாட்டில் வெளியிடப்பட்ட படைபுகள்

1. பாட்டாளி வர்க்க இயக்க நிலையை ஆய்வு செய்யும்  தத்துவம் மற்றும் அரசியல்

2. கட்சி மற்றும் புரட்சிகர வெகுஜன இயக்கம் - கோட்பாடுகளின் அடிப்படையில்

3. இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்ப்பது குறித்த மார்க்சிச நிலைப்பாட்டிலான அணுகுமுறை

மாலை 2:00 மணியளவில் வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு தோழமைக்குரிய இடதுசாரிய கட்சிகளின் மாநாடு குறித்த வாழ்த்து செய்திகளும்; சிங்கள - தமிழ் பாடல்கள், நடனங்கள் என கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை சோசலிச கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி, இடது குரல், புதிய ஜனநாயகக் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின், புரட்சிகர சோசலிஸ்ட் சென்டர், கூட்டு pratsis,  புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை இடதுசாரி கட்சிகள், குழுக்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை வழங்கினர். ஜெர்மன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி,  தொழிலாளர் சர்வதேச குழு, ஐந்தாவது சர்வதேச சர்வதேச லீக், இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, இத்தாலி rifondasiyōnē  கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர்.

மாலை மாநாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மத்திய கமிட்டி  உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

மத்திய குழு சேனாதீர குணதிலக, குமார் குணரத்தினம், சமீர கொஸ்வத்த, புபுது ஜாகொட, விமல் வத்துகேவ, செயின்ட் ரஞ்சித், ரவீந்திர முதலிகே, ஜூட் சில்வா புள்ளே, இந்திரானந்த டி சில்வா, சுஜித் குருவிட்ட, பிரியந்த, கவுலாராச்சி, சந்திரசிறி, விமல்,  பியதிஸ் மற்றும் விபுலா அறிமுகப்படுத்தப்பட்டனர். 

மேலதிக படங்களிற்கு இங்கே அழுத்தவும்