Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சிறைச்­சா­லை­களில் தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சியல் கைதிகளையும் விடு­தலை செய்­யக்­கோரி சம உரிமை இயக்­கத்­தினால் நேற்று கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்­பட்­டது. சம உரிமை இயக்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்­டத்தில் முன்­னிலை சோஷலிச கட்சி, இலங்கை ஆசி­ரியர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சிறைச்­சா­லை­களில் தடுத்து­ வைக்கப்பட்டுள்ள நபர்­களின் உற­வினர்கள் என பல்­வேறு தரப்­பி­னர் கலந்து கொண்­டனர்.

இதன் போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் 100 நாட்கள் முடி­வ­டைந்தும் வடக்கில் இளை­ஞர்கள் இன்னும் சிறையில், யுத்தம் முடி­வ­டைந்து பல வருடங்க­ளாக கைதிகள் சிறையில், அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் விடுதலை செய், இதுவா நல்­லாட்சி, மக்­களின் ஜன­நா­யக உரி­மைக்கு மதிப்­பளி ஆகிய சுலோ­கங்­க­ளு­ட­னான பதா­கைகளை ஏந்­தி­ய நிலையில் அர­சுக்கு எதி­ராக கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த 14 வய­து­டைய சிறுமி ஒருவர் ஊடகங்­க­ளுக்கு கண்ணீர் மல்க கருத்து தெரிவிக்­கையில்,

எனது அம்­மாவின் பெயர் சசி­தரன் தங்­க­மலர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் கைது­செய்­யப்­பட்­டார். இவ்­வாறு கைது­செய்­யப்­பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் விசா­ர­ணைகள் எதுவும் இன்றி தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ளார்.

எனக்கு நான்கு சகோ­த­ரிகள் அவர்கள் அனை­வரும் திருமணம் முடித்து விட்டனர். இவ்­வா­றான நிலையில் எனது வீட்டில் நான் மட்­டுமே தனி­மையில் எனது அம்­மாவை பிரிந்து தவிக்­கின்றேன்.

எனது அம்­மாவை பிரிந்து வாழும் என் னால் எனது கல்­வி­யையும் தொடர முடியாமல் எனது எதிர்­கா­லமும் கேள்­வி­க்குறியா­கி­யுள்­ளது.

இங்கு இருக்கும் அனை­வ­ரையும் நான் மன்­றாடி கேட்­கின்றேன். எப்­ப­டி­யா­வது எனது அம்­மாவை மீட்­டு­த்தா­ருங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

யுத்­த­ கா­லங்­களில் பல்­வேறு குற்­ற­சாட்­டுக்­களின் அடி­ப்ப­டையில் அர­சியல் கைதிகள் எவ்­வித விசா­ரணை­களும் இன்றி தடுத்­து­வைக்கப்­பட்­டுள்­ளமையை கண்­டித்து முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலும் இன்­றைய அர­சாங்­கத்­திலும் தொடர்ச்­சி­யான போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­ன்றன.

இவ்­வா­றான நிலையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எமது ஆட்சியில் எந்த ஒரு அரசியல் கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.lankaviews.com/