Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

"இடது சாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும்

எதிர்வரும் ஜீன் 30ம் திகதி செவ்வாயன்று,  யாழ் நூலக உணவக மண்டபத்தில்  "இடதுசாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வினை முன்னிலை சோசலிச கட்சி ஒழுங்கு செய்துள்ளது.

முன்னிலை சோசலிச கட்சி அன்றைய தினம் தனது யாழ் மாவட்ட செயலகத்தினை 412, ஸ்ரான்லி வீதியில் ஆரம்பித்து கட்சியின் அரசியல் செயற்பாடுகளை வடபகுதியில் விஸ்தரிக்க உள்ளது.

"இடது சாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும்

காலம்: ஆனி 30, செய்வாய்க் கிழமை

நேரம்: மாலை 3 மணி

இடம்: யாழ். நூலக உணவுச்சாலை மண்டபம் , யாழ்ப்பாணம்

 

தொடர்புகளுக்கு :

ஜூட் சில்வா பிள்ளை - 0714966738