யாழ் மையவாதச் சிந்தனையா! "சொர்க்கத்தில் பிசா" சைக் காட்சிப்படுத்துவதை தடுத்தது!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 October 2018
- Hits: 5703
"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஒடுக்கும் தரப்பு சார்பில் இருந்து எழுகின்றது.
இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.
இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஒடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஒடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.
இன்று ஜனநாயகம் பேசுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் - புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் ஜனநாயகத்தை மறுத்தபோது, மக்களுக்காக போராடுவதற்காக என்று கூறி ஜனநாயகத்தைக் கோரியவர்கள் தான். ஆனால் புலிக்கு பின் தொடர்ந்து இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக - அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கும் ஜனநாயகத்தை கோரி செயற்படவில்லை. மாறாக புலிகளையும் - மக்களையும் ஒடுக்கிய, ஒடுக்குகின்ற அரசுக்கு சார்பாக ஜனநாயகத்தைப் பேசுகின்றவர்களாகவே இன்று இருக்கின்றனர்.
"சொர்க்கத்தில் பிசாசு" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 October 2018
- Hits: 5911
"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஓடுக்கும் தரப்புக்கு சார்பில் இருந்து எழுகின்றது.
இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.
இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஓடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஓடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஓடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.
DEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 October 2018
- Hits: 7513
இங்கு யாழ்ப்பாணத்தில, சில வருடங்களாக யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சில சிங்கள NGO - முதலாளிகள் மேற்குநாடுகளின் நிதியில் இதை நடத்துகிறார்கள். கடந்தவருடம் கூட இதை பற்றி விரிவாக எழுதியிருந்தேன். இப்போ, நான் இங்கு பதியப்போவது இந்த பட விழாவில் திரையிட மறுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு படத்தைப்பற்றி. புலம்பெயர் நாடுகள் உட்பட இலங்கையில் தம்மை அதிதீவிர ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள், சமுகப் போராளிகள், மார்க்சிசவாதிகள், இடதுசாரிகள் என கூறிக்கொள்வோர் சிலர் DEMONS IN PARADISE என்ற படம், மேற்படி படவிழாவில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி - அதற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர். ஆத்திரப்படுகின்றனர். போராட்டத்துக்கு அறிவித்தல் விடுகின்றனர். டெமோன் இன் பரடைஸ் என்ற படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினத்தின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஆக்ரோஷத்துடன் கூக்குரலிடுகின்றனர்.
ஆனால், இதே நபர்கள் ஆண்டாண்டு காலமாக புலியெதிர்ப்பை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இன மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராகவே செயற்படுபவர்கள். இன்று மேற்படி படத்தை திரையிட வேண்டுமென இவர்கள் கூப்பாடுபோடுவதன் காரணமே, அந்தப் படத்தின் அடித்தளம் - பிரச்சார வீச்சு எல்லாம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கான மறுமுனைவுக்கு எதிராக இருப்பதுதான் என்பது எனது கருத்து !
போதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 September 2018
- Hits: 5716
ஆணாதிக்க சமூகமும் - வக்கிரம் பிடித்த ஆணாதிக்கவாதியும் செய்த கொலையை மூடிமறைக்க – "தேசியத்தின்" கொலையாக திரித்துக் காட்டுவது நடக்கின்றது. ஓடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய புலித் தேசியத்தினதும்;, புலிக்குப் பிந்தைய போலித் தேசியத்தினதும் ஒரு பிரதிநிதியாக இருந்த செந்தூரனின் நடத்தையை முன்னிறுத்தி, "தேசியமே" இந்த தற்கொலைக்கு காரணமாகக் காட்டிவிட முனைகின்றனர். இதன் மூலம் இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை மறுப்பதற்கு, போதநாயகியை மறுபடியும் கொன்று விடுகின்றனர். இதன் மூலம் ஆணாதிக்கத்தையும் - இனவொடுக்குமுறையையும் பாதுகாக்க முனைகின்றனர். இதற்கு மாறானதே உண்மை.
ஆணாதிக்க வன்முறையானது போதநாயகியை தற்கொலைக்குத் தூண்டி - கொலை செய்திருக்கின்றது. போராடி வாழ வேண்டிய பெண்ணின் துயரமான வாழ்வுக்கு, ஆணாதிக்க சமூகமே பொறுப்பேற்க வேண்டும்;. சமூகத்தில் உள்ள பிற்போக்கான சமூகக் கூறுகளின் துணையுடன் - குரூரமான ஆணாதிக்க நடத்தைகளைக் கொண்டு பெண்ணை ஒடுக்கும் போது - தனிமைப்படுத்தப்படுகின்ற ஒரு பெண்; தற்கொலையை தேர்ந்தெடுக்கின்ற அளவுக்கு, சமூகம் பொறுப்பற்றதாகி இருக்கின்றது.
இது போன்று இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்ற உணர்வுடன் - ஆணாதிக்கத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும். இதுதான் போதநாயகிக்கு கொடுக்கும் கவுரவமாகும். இதற்கு மாறாக இதை "தேசியத்தின்" வக்கிரமாக திரித்துக்காட்டி, ஆணாதிக்கத்தை கண்டுகொள்ளாத சமூகமும், மனித அவலத்தை கொசிப்பாக்கி செய்தியாக்கும் வக்கிரங்களே அரங்கேறுகின்றது.
ஆணாதிக்க வக்கிரத்தையும் - வன்முறையையுமே போதநாயகி எதிர்கொண்டாளே ஓழிய அவன் முன்வைத்த "தேசியம்" சார்ந்த ஒடுக்குமுறையையல்ல. இப்படி இருக்க "தேசியமே" காரணம் என்று, போலி இடதுசாரியமும் - போலிப் பெண்ணியமும் ஓப்பாரி வைப்பது நடக்கின்றது. எதிர் எதிரான போலி "தேசியவாதங்கள்" தங்கள் சொந்த ஆணாதிக்கத்தை மூடிமறைக்க, விதவிதமாக கதைகள் மூலம் வக்கிரமடைய வைக்கின்றனர்.
பொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 26 September 2018
- Hits: 6528
குறிவைத்து புலம்பெயர்ந்த பழைய மாணவர்களிடம் பணம் வாங்குவது பாடசாலைகளின் குறுகிய நோக்கமாகிவிட்டது. பணத்தை திரட்டித்தரவே பழைய மாணவ சங்கங்கள் என்றளவுக்கு, சங்கங்கள் தரம் தாழ்ந்து வருகின்றது.
பணத்தைக் கொணடு எதையும் வாங்கலாம், கல்வியை ஊட்டலாம் என்ற அபத்தமே, கல்வியைச் சுற்றி அரங்கேறுகின்றது. பணம் கொடுத்து கல்வி பெறலாம் என்ற தனியார் கல்வியை முறைக்கு ஏற்ப, பணம் சார்ந்த செயற்பாடுகள் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில் பணமே, கல்வி நடவடிக்கையாகி வருகின்றது. பணத்தை கேள்விகளின்றி தரவேண்டும் - அதைக் கொடுக்க வேண்டும் என்பதே, சமூக நடத்தையாக குறுக்கப்பட்டு வருகின்றது.
இப்படி பெறப்படும் - கொடுக்கப்படும் பணத்துக்கு வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கு வெள்ளை அறிக்கை கோருவது – கல்விக்கு எதிரானது என்ற கூறுமளவுக்கு, பணம் அனைத்துமாகி, பாடசாலையை சுற்றி எடுபிடிகள் உருவாகி வருகின்றனர்.
யார் யார் எவ்வளவு பணம் தந்தார்கள், அது எதற்கு - எப்படி செலவு செய்யப்பட்டது என்று ஒவ்வொரு சதத்துக்கும் வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கை வெளிப்படையாக பொது வெளியில் முன்வைக்க மறுக்கின்றார்கள் என்பதே உண்மை.
இதைவிட பண அறவீடுகள் கல்வி கற்கும் மாணவர்களிடமும் நடக்கின்றது. புதிதாக பாடசாலையில் சேரும் மாணவர்களிடம் பெரிய தொகையாக பணம் கறக்கப்படுகின்றது.
ஆக இப்படி கல்விக்கூடங்கள் பணத்தை கையாளும் ஊழல் நிறுவனங்களாகவும் – மோசடிகள் நிறைந்ததாகவும் மாறி வருகின்றது.
இன்று பாடசாலைகளைப் பொறுத்த வரை, வருடாந்தம் ஒரு சில லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை திரட்டப்படுகின்றது.
மக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த "அறமும் போராட்டமும்" என்றொரு நூல்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 September 2018
- Hits: 5853
"அறமும் போராட்டமும்" என்ற நூல், போராட்டம் என்றால் வன்முறையானது என்கின்றது. இதன் பொருள் போராடுவதற்கான ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டி மறுப்பதுதான். மக்களின் ஜனநாயகம் வன்முறையானது என்று கூறி, அதை மறைமுகமாக மறுக்கவும் - ஓடுக்கவும் முனைகின்றது.
இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு முதலாளித்துவ ஜனநாயகமே முரணாகி வருவதால், ஜனநாயகத்தை ஒடுக்குவது அவசியமாகிவிட்டது. இதனால் நவதாராளவாத மூலதனமானது ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டவும் - நிறுவவும் முனைகின்றது. ஜனநாயகத்தை முன்னிறுத்தி போராடுவதை வன்முறையாகத் திரித்து ஓடுக்கமுனையும் இன்றைய நவதாராளவாத கோட்பாட்டைத் தான், கவுரிகாந்தனின் "அறமும் போராட்டமும்" என்ற நூல், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றது.
இன்னுமொரு பக்கத்தில் தமிழ் இனவாத போலி இடதுசாரியமானது - இனவாத வலதுசாரியத்தை "இடதுசாரியமாக" காட்டவும் - நிறுவவும் இதன் மூலம் முனைகின்றது. அதாவது ஆயுதப் போராட்டமல்லாத எதுவும் போராட்டமல்ல என்று கூறுகின்ற தமிழ் இனவாதச் சிந்தனை முறையை மூடிமறைத்துச் சொல்லவும், வன்முறை இல்லாதவை போராட்டமல்ல அல்லது போராட்டம் என்பதே வன்முறையே என்று நிறுவவும் முனைகின்றது.
நவதாராளவாதத்துக்கு எதிராக வன்முறையின்றிய மக்கள்திரள் போராட்டங்கள் தோன்றிவிடுவதைத் தடுக்க, வன்முறையின்றிய போராட்டங்கள் எதுவும் போராட்டமல்ல, அவை எல்லாம் வெறும் "பாசாங்குத்" தனமானவை என்கின்றது. இதன் மூலம் போராடுபவன் எப்போதும், எங்கும் வன்முறையாளன் என்று காட்டி, அவனைச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி, அன்னியப்படுத்த முனைகின்றது.
இங்கு போராட்டம் என்பதே வன்முறை என்று கூறுவது, தனிநபர்வாத பயங்கரவாதக் கோட்பாடும் – அதன் சித்தாந்த முறையுமாகும். அது ஜனநாயகத்தை தனக்கு எதிரான ஓன்றாகவும், அதை வன்முறையாகவும் காட்டி ஓடுக்கவும் கோருகின்றது. அதற்கு இந்த நூல் உதவ முனைகின்றது.
யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 September 2018
- Hits: 6442
யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
சொந்த உழைப்பை சமூக உழைப்பாக மாற்றாத, தன் உழைப்பில் இருந்து சமூகத்துக்கான பங்களிப்பைச் செய்யாதவர்கள், இலங்கையில் புலம்பெயர் உதவியைக் கையாள்வதும் - கோருவதும் நடந்து வருகின்றது. இதுவே சமூக நோக்குக்கு முரணானதாகவும் - இதனாலேயே இது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியாததாகி விடுகின்றது.
மறுபக்கத்தில் நடைமுறை வாழ்வில் சமூக சிந்தனையையும் அதற்கான உழைப்பையும் வழங்க முடியாதவர்கள் - பணத்தைக் கொடுப்பதையே சமூக உணர்வாக கருதுகின்றவர்களால் கொடுக்கப்படும் பணம், சமூகச் சீரழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.
இரண்டு பக்கத்திலும் சமூகம் சார்ந்த சிந்தனையும் - நடைமுறையும் இன்றிய பணச் செயற்பாடுகள் என்பது, சமூக அழிவுக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு வழிகாட்டல் இன்றியும், பணத்துக்கு என்ன நடந்தது என்ற சுயகேள்வியும் இன்றியும், அதனால் அந்தக் குழந்தைக்கு கிடைத்த நன்மை என்ன என்ற கேள்வியும் இன்றி, பணத்தைக் கொடுத்தால் என்ன நடக்குமோ, அதுதான் இங்கும் நடக்கும்.
யுத்தம் கூட கல்வியை இந்தளவுக்கு சீரழித்;தது கிடையாது. யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தை, புலம் பெயர் பணம் சீரழிக்கத் தொடங்கி இருக்கின்றது.
பணத்தைக் கொண்டு புலம்பெயர் சமூகத்தை வழிநடத்த முனையும் சுயநலவாதிகளாலும், பிரமுகர்களாலும், பதவி வேட்டை பேர்வழிகளாலும் புலம்பெயர் உதவியை சமூக நோக்கு உள்ளதாக்க முடியாது. ஆனால் அவர்கள் தான் இன்று இதைக் கையாள்வது நடக்கின்றது.
பணத்தைக் கொண்டே கல்வியின் இலக்கை அடைய முடியும் என்று கூறுவதும், பணத்தை பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள கல்வி சமூகத்தால், சமூகத்தை அழிவுக்கே வழிநடத்த முடியும்.
இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி, யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தின் கல்வியை அழிக்கின்றது.
சோஃபியாவும் - பாஸிசமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 10 September 2018
- Hits: 6312
எந்த அரசியல் பின்புலமுமற்ற மத்தியதர வர்க்கப ; பெண் "பாசிசம் ஒழிக" என்று கோசம் போட்டதைக் கண்டு, பாசிட்டுக்கள் அதிர்ந்து போயுள்ளனர். சுயநலம் பிடித்த மத்தியதர வர்க்க பொது மனநிலைக்கு முரணாக, ஓட்டுமொத்த சமூகமும் அரசியல்மயமாவது கண்டு, ஊடகங்கள் தாங்கள் போட்டிருந்த "நடுநிலைமை" வேசத்தை உதறி, பாசிசத்தை முண்டுகொடுக்கும் விவாதங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். "பாசிசம் ஓழிக" என்ற கோசத்தில், பாசிசம் என்று கூறியது ஏன் என்ற விவாதத்தை மறுதளித்து பாசிசத்தை பாதுகாக்க முனைவதே ஊடகவியலாக மாறி வருகின்றது.
விமானத்தில் கோசம் போடலாமா என்று பாஜக பாசிட்டுகள் குற்றஞ்சாட்டும் அதே உள்ளடக்கத்தை கொண்டு, ஊடகங்கள் தங்கள் பங்கை அரங்கேற்றுகின்றது. விமானத்தில் கோசம் போடலாமா என்று விவாதம் நடத்தியதுடன், நடுத்தர வர்க்க பெண்ணின் எதிர்காலம் குறித்து பொதுப் பீதியை ஊட்டி விடுகின்றனர். விமானத்தில் நடத்திய "போராட்டத்தை" தவறான போராட்ட வழிமுறையாக சித்தரித்து வருகின்றனர். இப்படிப் போராடுவது என்பது பின்னணியின்றி இருக்க முடியாது என்று கூறுவதன் மூலம், அதைப் பாசிச பாணியில் உண்மையென்று நம்பவைக்க முனைகின்றனர்.
போராடிய பெண்ணின் பால், சாதி, மத.. அடையாளங்கள் மூலம், பாசிட்டுகள் பாணியில் "பாசிசம் ஓழிக" என்ற கோசத்துக்கு முகத்திரையை போட்டுக் காட்டி, பாசிசத்தின் முகத்திரையை மூடிவைக்க முனைகின்றனர். கைது, விசாரணை, நீதிமன்றம், பாஸ்போட்டை முடக்குவது என்ற தொடர் அச்சுறுத்தல்கள் மூலம், போராட முனையும் ஓவ்வொருவனுக்கும் இதுதான் கதி என்று அச்சுறுத்தும் பாசிச நடைமுறைகளை – முன்னின்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அச்சுறுத்துகின்றனர். அதாவது பாசிட்டுகள் தங்கள் அடக்குமுறைகள் மூலம் எதை மக்களுக்கு உணர்த்த முனைகின்றனரோ – அதை ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் பாசிசத்துடன் கைகோர்த்துப் பயணிக்கின்றவர்களாக மாறி நிற்கின்றனர்.
ஆள அதிகாரமா? வாழ ஆதாரமா? எது வேண்டும் எமக்கு?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 16 August 2018
- Hits: 6786
இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.
1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.
ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).
புலிகளினதும் - கிட்லரினதும் ஆட்சியைக் கோருவது ஏன்?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 August 2018
- Hits: 5935
புத்தபிக்குகள் கோத்தபாயவிடம் கிட்லர் ஆட்சியைக் கொண்டுவருமாறு கோரினர். யூ.என்.பியின் எம்பியும் - அமைச்சருமாக இருந்த விஜயகலா புலிகளின் ஆட்சியைக் கோரினார். உண்மையில் இவை தற்செயலான – கிறுக்குத்தனமான கோரிக்கையோ - கூற்றுக்களோ கிடையாது. மாறாக இனரீதியான முரண்பாட்டுக்குள், இனவாத சக்திகளின் ஆதரவு பெற்ற கருத்துக்களாகவும் - "ஜனநாயகம்" குறித்த அறியாமையின் பொது உள்ளடக்கமாகவும் இருக்கின்றது.
பேரினவாதக் கருத்தியலானது கிட்லரின் மீள்வருகை குறித்த கருத்தைக் கொண்டாடும் அதேநேரம், கிட்லரின் ஆட்சியையொத்த புலிகளின் ஆட்சி குறித்த கருத்தை எதிராக முன்னிறுத்துகின்றனர். தமிழினவாதக் கருத்தியலானது புலிகளின் ஆட்சியைக் கொண்டாடும் அதேநேரம், புலிக்கு நிகரான கிட்லராக கருதப்படும் கோத்தபாயவின் ஆட்சியை எதிர்க்கின்றனர். இப்படி ஒரே கருத்தை எதிரும் புதிருமாக சிந்திப்பதே, முரண்பட்ட சிங்கள - தமிழ் இனவாதச் சிந்தனைமுறையாக இருக்கின்றது.
இங்கு விஜயகலா கோரியது பேரினவாதம் கூறுவது போல் புலிகளின் மீள்வருகையை அல்ல, புலிகளின் ஆட்சிமுறையையே கோரினார். கோத்தபாயவிடம் புத்தபிக்குகள் கோரும் அதே ஆட்சிமுறையையே விஜயகலாவும் கோரினார். இந்த வகையில் தமிழ் - சிங்கள இனவாதிகள் எந்த வகையான ஆட்சிமுறை அவசியம் என்பதில் ஒன்றுபட்டு நிற்பதும், அவற்றின் பிரதிநிதித்துவத்தை கோருவதில் மட்டும் முரண்பாடு நிலவுகின்றது.