பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை போராட அணிவகுப்போம்.
- Details
- Category: மக்கள் போராட்டங்கள்
- Created: 21 January 2018
- Hits: 1053
பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை
போராட அணிவகுப்போம்.
நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.
புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.
யாருக்கு வாக்களிப்பது!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 January 2018
- Hits: 5575
மக்களின் அன்றாட சமூகப் - பொருளாதார வாழ்வுடன் ஓன்றுபட்டு ஒன்றி வாழ்வதும் - போராடுவதுமே அரசியல். இந்த வகையில் சமூக செயற்பாட்டாளனாக மக்களுடன் மக்களாக தன்னை அர்ப்பணித்து ஒன்றி வாழாத ஓருவன், தேர்தல் மூலம் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றப் போவதாகக் கூறுவதே மோசடியாகும். இதுதான் இன்று தேர்தல் அரசியலாக இருக்கின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது தேர்தலாகவும், அதில் வெற்றி பெறுவதே சமூக சேவையாகவும் இட்டுக் காட்டுகின்றனர். இந்த அரசியல் பின்னணியிலேயே, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதையே ஜனநாயகமாகவும் காட்டுகின்றனர்.
இன்று உள்ளுராட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கி இருக்கின்றவர்களில் 99.9 சதவீதமானவர்கள், மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த சமூக நடைமுறைகளில் ஈடுபடாதவர்கள். தேர்தல் மூலம் கிடைக்கும் அரசு அதிகாரங்கள் மூலம் மக்களை மொட்டை அடிக்கவும், தங்கள் சொந்த வாழ்க்கையை செழுமைப்படுத்தவுமே களமிறங்கி இருக்கின்றனர். தேர்தல் மூலம் வெல்வது என்பது, இலகுவாக பணத்தை சுருட்டிக் கொள்வதற்கான இடமாக மாறி இருக்கின்றது.
மரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 11 January 2018
- Hits: 6276
கத்தோலிக்க மதப் பின்னணி எனக்கு இருந்ததனால் மரிய மதலேனா பற்றி கொஞ்சம் தெரியும். 8ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு படிக்கிற காலத்தில வாணி, சரஸ்வதி, மாதவி, பாரதி, வாகதீஸ்வரி, மாலினி எண்டு, கொஞ்ச பொம்பிளைப்பிள்ளையளுக்கு பின்னால திரியேக்க, அவயட சமய புத்தகத்தில இருந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாயன்மார் பற்றிய கதைகளை வாசிக்கும் போது, மேலோட்டமாக அறிமுகமானவர் தான் ஆண்டாள் என்கின்ற கோதை. கொஞ்சம் வயது வந்த பின்னாடி, மரியா மதலேனாவைப் பற்றியும் ஆண்டாளைப் பற்றியும் நான் "விபரமாக" தெரிஞ்சு கொண்டது சினிமா திரைப்படங்கள் ஊடாகத் தான்.
எனக்கு இன்றைக்கும் ஆண்டாள் என்றால் நினைவில் வருவது, பாரதியின் "காக்கை சிறகினிலே நந்தலாலா" என்று பாடியபடி திருமால் பெருமை படத்தில் தோன்றிய கே.ஆர்.விஜயா தான்! சிவாஜி ரசிகனான நான் அநேகமாக எல்லாப் படங்களையும் அவருக்காகவே பார்த்திருக்கிறேன். ஆனால், திருமால் பெருமை என்ற படத்தை நான் பலதடவைகள் கே.ஆர்.விஜயா நடித்த ஆண்டாளுக்காகவே பார்த்திருக்கிறேன்.
இப்படத்தால் ஏற்பட்ட "பாதிப்பால்" ஆண்டாளை பற்றி தேடியிருக்கிறேன். ஆண்டாள் திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் வரும் பல வரிகளை என்னால் இப்போதும் மனப்பாடமாக கூறமுடியும். எனக்குத் தெரிந்த இலக்கியம் பற்றிய உலகவரலாற்றில், பல நூறாண்டுகளுக்கு முன்பேயே, காதலால்-காமத்தால் கவிதைப் பெருக்கெடுத்து, ஆணை object தன் ஆளுமைக்கு உட்பட்ட பொருளாக்கி - அல்லது ( கண்ணன்/கிருஸ்ணன் என்ற) கடவுளையே தன் காதல்-காம வெளிப்பாட்டுக்கான object - பொருளாக்கி பாடிய பெண்ணைப் பற்றிய பதிவை நான் வாசிக்கவில்லை.
போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது
- Details
- Category: போராட்டம் பத்திரிகை
- Created: 09 January 2018
- Hits: 1006
போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது.
கட்டுரைகள்
1. ஏமாறாதிருப்போம்! எழுந்து நிற்போம்
2. துன்பமும் போராட்டமும்
3. சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு
4. அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்
5. உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆம் ஆண்டு
6. கட்சிகளுக்கான அரசியலும், மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்
7. யார் யாருடைய வயிற்றுக்குள்? அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்
8. கலைமதி கிராமத்தின் சுடலைக்கு எதிரான போராட்டமும்-வெற்றியும், இடதுசாரிய இயக்கமும்
9. தேர்தல் வரும் பின்னே! தீர்வு(அரசியல் யாப்பு) வி(இன)வாதம் வருகிறது முன்னே!
10. வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்
11. யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?
12. 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் நிலைப்பாடும்
13. இனவாதம் பலவிதம் - ஐக்கியப்பட வேண்டிய தருணமிது
"தூய கரங்கள் - தூய நகரங்கள்"
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 31 December 2017
- Hits: 5596
சாதிய சமூகத்தில் "தூயது" என்பது, ஒரு பாசிசக் கருத்தியலே. தமிழன் என்ற "தூய" கருத்தியலும் - வாழ்வுமுறையும், பிற இன மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகத்துக்கு எதிரான மனித விரோதப் பண்பாட்டையும் - நடைமுறையையுமே முன்வைக்கின்றது.
"தூய" தமிழர் என்ற ஒடுக்கும் சாதிய கருத்தியலானது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சாதியத்தில் இருந்து சமூகத் தூய்மையைக் கோருகின்றது. இந்த தூய்மைவாதமே பிற பண்பாட்டு கூறுகளுக்கு எதிராக, கோயில்களில் புனிதத்தை முன்வைக்கின்றது. அந்தந்த சாதிக்குள்ளான சாதிய வாழ்க்கை முறைமையையே தூய்மைக் கோட்பாடு முன்வைக்கின்றது. மனிதன் உண்ணும் உணவில், புனிதத்தையும் தூய்மையையும் முன்வைக்கின்றது. எதைக் கடவுளுக்கு படைக்கலாம் என்ற, சாதிய வக்கிரத்தையும் சமூகத்தில் புகுத்துகின்றது.
கூட்டமைப்பு மூலம் தமிழ் மக்களை அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறமுடியாத அணியினரின் கோசம் தான் "தூய கரங்கள் - தூய நகரங்கள்" என்பதாகும். யாழ் மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் மூலம் முன்வைத்திருக்கும் இக்கோசமானது, அவரினதும் - அவர் கட்சியினதும் கடந்தகால கொள்கையும் நடைமுறையுமாகும். இந்த பின்னணியில் அவர்கள் "மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்" என்று கோருகின்றார். சரி எந்த மாற்றத்துக்காக?
சுரண்டலற்ற மனித சமுதாயத்துக்காகவா!?, சாதிகளற்ற மனித வாழ்வுக்காகவா!?, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான "தமிழ்" தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவா!?, இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராடவா!? மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்கவா!? யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான யாழ்மையவாத சமூகத்தை மாற்றி அமைக்கவா!? இல்லவே இல்லை. இருக்கின்ற பிற்போக்கான யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சாதிய சமூகத்தை தக்க வைக்கவும், அதற்கு தலைமை தாங்கவுமே வாக்கைக் கோருகின்றனர். அவர்கள் போடும் வேசங்களைக் கடந்து, இதுவே தான் உண்மை.
மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன வெள்ளாளிய இந்து சாதிய சமூக அடிப்படையில் இருந்தே, வேள்வித் தடையைக் கோரி வழக்கு தாக்கல் செய்தது முதல், சாதிய மயானங்களைத் தக்க வைக்கும் வண்ணம், அண்மைய போராட்டங்களுக்கு எதிராக சாதிய அடிப்படைகளை உயர்த்திப் பிடித்தவர். இது தான் அவர் நிற்கும் கட்சியின் வரலாறும் கூட.
முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 24 December 2017
- Hits: 5411
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.
பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம் அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.
யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 December 2017
- Hits: 3530
சிம்பாப்பேயின் றொபேர்ட் முகாபே, தனது சொந்த இராணுவ உயரதிகாரிகளினால் பிரயோகிக்கப்பட்ட பாரிய அழுத்தத்தின் காரணமாய் மூன்று தசாப்தங்களுக்கு மேலான தனது ஆட்சியதிகாரத்திலிருந்து பதவி விலகிக் கொண்டுள்ளார். இவர் பதவி விலகிக்கொண்டதான அறிவிப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் கிளர்ந்தெழுந்தன.
முகாபேயின் சொந்தக் கட்சிக்குள்ளேயே முகாபே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த வேளையின் மத்தியில், முகாபே தனது இந்த பதவிவிலகல் அறிவிப்பினை வெளியிட்டார். பதவிவிலகும் கணத்தில் உலகநாடுகளின் தலைவர்களில் வயதில் எலலோரையும் விட மூத்தவரான முகாபேக்கு வயது 93 ஆகும். கடவுளால் மட்டுமே தன்னை அதிகாரத்திலிருந்து நீக்க முடியும் என்று அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். சிம்பாப்பே நாட்டினுடைய விடுதலை இயக்கத்திற்கு தலைமை வழங்கிய அதிபர் முகாபே அந்நாடு சுதந்திரம் அடைந்த 1980 ம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்து வருகிறார். 1987 இல் சிம்பாப்வே ஜனாதிபதி முறைமைக்கு மாறியது. ஐனாதிபதி முறைக்கு மாறும் வரைக்கும் முகாபே நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.
2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிலைப்பாடும்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 18 December 2017
- Hits: 1212
தேர்தல் முடிவுகள் என்பது மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகும் எனவும், தேர்தல் என்பது மக்கள் கருத்தை அளவிடும் கருவியாகுமெனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனால் அது உண்மையல்ல என்பது பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நபரும் புரிந்து கொள்வார். நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ‘மக்கள் கருத்து’ என்பது மக்கள் மத்தியில் தானாகவே உருவாகிய ஒன்றல்ல. பணபலம், ஊடகபலம், குண்டர்பலம் மற்றும் அரசியற்பலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக மக்கள் மனதை சலவை செய்யும் (மூளைச் சலவை) விடயத்தில் ஊடகங்கள் முன்னின்று உழைக்கின்றன. சாதாரண காலங்களிலும் மக்கள் கருத்தென்பது அப்படியானதாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் காலங்களில் அது மேலும் தீவிரமடையுமே தவிர வேறொன்றும் நடக்காது. ஆகவேதான் தேர்தல் முடிந்த பின்பு வெளிவரும் தேர்தல் முடிவுகள் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட ‘மக்கள் கருத்தின்’ வெளிப்பாடெனக் கூற முடியும்.
என்றாலும், தேர்தல் நேரத்திலும் அதற்கு முன்பும் நடக்கும் விசேட பரப்புரைகளின்; ஊடாக இடதுசாரிய கருத்தியலை சமூகமயப்படுத்த முடியாதென்பது இதன் கருத்தாகாது. குறிப்பிட்டளவு முயற்சி செய்தால் தேர்தலில் இடதுசாரிய அமைப்புகளுக்கும் ஓரளவு மக்கள் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும், அதற்கு ஒரு வரையறை இருப்பது சம்பந்தமான புரிந்துணர்வும் வேண்டும்.
அதேபோன்று, இடதுசாரிய கட்சிகள் தேர்தலில் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பங்கேற்பது (நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள்) குறித்து தமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்ளும்போது வரலாற்றில் பெற்றிருக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்பதையும் மறக்கக் கூடாது. இலங்கையிலும், சர்வதேச அரசியலிலும் தேர்தல் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்கள் சம்பந்தமாக தலையீடு செய்வது எப்படி என்பது குறித்து தேவையானளவு உதாரணங்கள் கிடைக்கின்றன. பிரதிநிதிகள் நிறுவனமொன்றிற்காக நடக்கும் இவ்வாறான தேர்தல் களங்களை இடதுசாரிய இயக்கம் தனது அரசியல் போராட்டத்தின் பிரதான அல்லது ஒரே போராட்டக் களமாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும். மக்கள் கருத்தின் மீது தiலையிடுவதற்கான சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த வேண்டும் என்பதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.
புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்! -முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 12 December 2017
- Hits: 799
புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்!
தமது சம்பளமுரண்பாட்டை உடனடியாக தீர்க்குமாறு வற்புறுத்தி புகையிரத சேவைகள் பலவற்றில் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு செயற்பாட்டுக்கு அரச அடக்குமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புகையிரத சங்கங்கள் நீண்டநாட்களாக தமது சம்பள உயர்வு தொடர்பாகவும், மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பாகவும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அது தொடர்பாக அதிகாரிகளின் எவ்வித பதிலும் கிடைக்காதனால் இன்று அது வேலைநிறுத்தம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஆரம்பத்திலேயே தீர்வு பெற்றுக்கொடுக்காது பிரச்சினை வளர்க்கும் ஆட்சியாளர்கள் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வகை கூறவேண்டும்.
அந்த வகைகூறலோடு ஆட்சியாளர்கள் வேலைநிறுத்தத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவை பாதிப்படைவதைப் பாவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை பாவித்து வருகின்றனர்.
புகையிரத சேவையையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தல், குறித்த நேரத்திற்குள் சேவைக்கு திரும்பாத புகையிரத தொழிலாளர்கள் சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவதாக அறிவித்தல் போன்ற அச்சுறுத்தல் தற்போது அரசாங்கத்தினால் விடப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பாரிய அடக்குமுறையாக அது அமையும்.
புகையிரதம் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவை அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்திற்கு தெரிவது தொழிலாளர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னரே.
இதற்கு முன்னர் புகையிரத திணைக்களத்தை தனியார் கம்பெனிக்கு விற்கும் தீர்மானம் எடுக்கும்போது அல்லது அரசாங்க நிதி ஒதுக்கீட்டை வெட்டிவிடும்போது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் செயற்பட்டது அத்தியாவசியதன்மையை கவனத்தில் கொள்ளாது.
தற்போது இந்த சந்தர்ப்பத்தில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தலைவர்களிடம் எமக்கு கேட்க வேண்டியிருப்பது 2015 இல் 78 பில்லியன், 2016 இல் 58 பில்லியன், 2017 இல் 51 பில்லியன் என பொதுப் போக்குவரத்து செலவுகளை குறைத்தபோதும், 2018 வரவுசெலவு திட்டத்தில் அது 43 பில்லியன் வரை மேலும் வெட்டப்பட்டுள்ளபோதும் அது அத்தியாவசிய சேவையாக ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இவைகளில் உள்ள சமூகமய அத்தியாவசிய பாவனை உள்ளது. அந்த சேவைகள் தொடர்பாக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கு அல்ல அந்த சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் உரிமையை இல்லாதொழிக்கவே என நாங்கள் மக்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.
இனமுரண்பாட்டால் பலியானவர்களும்! - அவர்களின் நோக்கமும்!!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 December 2017
- Hits: 5087
தனிப்பட்ட சுயநல நோக்கங்களின்றி, தம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்களை, அரசியல்ரீதியாக நாம் இன்று இனங்காண வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே, தங்கள் வாழ்க்கையையும் - உயிர்களையும் அர்ப்பணித்தவர்களே அஞ்சலிக்குரிய தியாகிகள். அவர்கள் ஒரு நாளும் தமிழன், தமிழனை அடக்கி ஆள்வதற்காக தம்மைத் தாம் அர்ப்பணிக்களில்லை. இதைத் தான் உண்மை. இதுதான் இன்று மறுதளிக்கப்படுகின்றது.
மக்களை ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்க போராடியவர்களைத் தலைமை தாங்கியவர்கள் மக்களை ஒடுக்குவோராக மாறியதே வரலாறு. மக்களுக்;காக மரணித்தவர்களின் முதுகில் குத்தியதும், குத்துவதுமே தொடருகின்றது. மக்களை ஒடுக்கும் தங்கள் தலைமை அதிகாரத்துக்காகவே நிலைநாட்டவே அவர்கள் போராடியதாகவும் - தியாகம் செய்ததாகவும் காட்டிக் கொண்டு, தொடர்ந்து ஓடுக்கும் அரசியலை முன்வைக்கின்றனர்.
போராடி இன்று உயிருடன் இருப்பவனோ, தானும் - தன் சமூகமும் எந்த ஓடுக்குமுறையிலும் இருந்து விடுபடாத அவலத்தையும் - தனக்கு தலைமை தாங்கி நிற்பவன் தன்னை சமூக ரீதியாக – பொருளாதார ரீதியாக ஓடுக்குவதைவும் காண்கின்றான். இது தான் போராடியவன் முன்னுள்ள எதார்த்தம்.
தமிழ் தேர்தல் அரசியல் முதல் இயக்க அஞ்சலிகள் வரை இதைத் தாண்டி, ஓடுக்கப்பட்ட மக்களை இட்டு கடுகளவும் கூட அக்கறைப்படுவதில்லை. இதனால் தான் இன முரண்பாட்டால் கொல்லப்பட்ட மக்களையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் இட்டு அக்கறைப்படுவதில்லை.