மூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்
சொந்த இனத்தின் இனவாதம் குறித்தும், சொந்த மதத்தின் மதவாதம் குறித்தும் கருத்துச் சொல்ல முனையாதவன், இனவாதியாகவும் மதவாதியாகவும் இருக்கின்றான். சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதிகள் வரை, சொந்த இன-மத ஒடுக்குமுறையை ஆதரிக்கின்றவர்களாக, பிற இன-மத வாதங்களை மட்டும் காட்டி அதை எதிர்ப்பவராகவும் இருக்கின்றனர். இதுவே சமூகத்தின் சிந்தனைமுறையாக இருக்கின்றது.
தான் அல்லாத பிற சமூகம் குறித்தும், இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் எதிரான பெரும்பாலான கருத்துகளும், இனவாதமாகவும் மதவாதமாகவும் இருக்கின்றது.
அனைத்தும் தனக்கில்லை பிறருக்கே என்று கூறுகின்ற தர்க்கங்களும், வாதங்களும், மனிதத் தன்மைக்கு வேட்டு வைப்பதுடன், சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்றது.
முஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்?
உனக்காகவும், உன் நன்மைக்காகவும் உழைப்பதாகவும் - குரல் கொடுப்பதாகவும் கூறிக் கொண்டும் - காட்டிக்கொண்டும், உன்னை பிறரிடம் இருந்து தனிமைப்பட்டு வாழக் கோருகின்ற பொறுக்கிகள் தான் சமூகவிரோதிகள்.
இந்த சமூக விரோதிகள் மானிடத்துக்கு கேடு விளைவிக்கும் வண்ணம், பிற சமூகத்துடன் கூடி உழைத்து வாழும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து ஓடுக்குகின்றது. வதந்திகளை உருவாக்கி அதைப் பரப்புவது முதல் பொது இடத்தில் முஸ்லிம்களை சந்தேகத்துக்குரியவராக முன்னிறுத்தி தனிமைப்படுத்தி ஒடுக்குவதே, இவர்களின் நோக்காக இருக்கின்றது.
பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே
தங்கள் கூட்டு ராஜினாமா மூலம் தங்களது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பறைசாற்றினார்களே ஒழிய, மதம் மற்றும் இனம் கடந்த மனிதர்களாக தங்களை முன்னிறுத்தவில்லை. இன-மதம் சாராத ஜனநாயகவாதிகளாக தம்மை முன்னிறுத்தி, பிற இன-மதம் சார்ந்தவர்களுடன் கூட்டு ராஜினாமாவைச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று, குண்டு சட்டிக்குள் ராஜினாமா செய்துள்ளனர்.
பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கும் நீதிக்கும் தலைவணங்குவதாக கூறும் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இவர்களுக்காக ராஜினாமாச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் குறித்து புலம்பும் யாரும், தங்கள் பதவிகளை இதற்காக துறக்க தயாராகவில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்
இன்று அதிகாரத்தில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்களை பதவி விலக்கக் கோரி, பௌத்த பேரினவாத அதிகார சக்திகளின ஒரு பகுதியினர் கோருகின்றனர். பௌத்த பேரினவாத சக்திகளுடன் தங்களை அடையாளப்படுத்தும் வெள்ளாளிய இந்துத்துவமும், பேரினவாத தயவில் கிறிஸ்துவத்தின் மகிமையைக் காணும் கும்பலும், இதன் பின்னால் கும்மி அடிக்கின்றது. அத்துடன் தமிழ் இனவாதிகளும், பதவிக்கும் பணத்துக்கும் அலையும் தமிழ் தரப்புகளும் இணைந்து, மனிதகுலத்தை கூறுபோட்டு நாட்டை நவதாராளவாதத்துக்கு இரையாக்குகின்றனர்.
நாடோ இன-மதவாத பதற்றத்துக்குள்ளாகி நிற்கின்றது. இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்களை பதவி விலக்க கோரும் உண்ணாவிரதம், சட்ட அமைப்புமுறையை ஒடுக்கும் இன – மத அதிகாரத்தின் கட்டைப் பஞசாயத்துக்கு உட்படுத்தக் கோருகின்றது.
இலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்
சாதிய சமூகத்தில் வாழ்ந்தபடி சாதியத்தைப் பாதுகாக்கும் புலம்பல்களே, சாதியம் குறித்த அளவீடாக இருக்கின்றது. பிறப்பால் சாதியை நிர்ணயிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு புலம்புகின்றோம். இந்த சாதியச் சமூகத்தின் சிந்தனைமுறையெங்கும், சாதியமே இருக்கின்றது. இந்த சாதிய சமூகம் முன்வைக்கும் தேசியம் முதல் சாதியம் குறித்த புலம்பல்கள் வரை, சாதியச் சிந்தனையே புரையோடிக் கிடக்கின்றது. பிறப்பிலான சாதியைக் கொண்டு ஒடுக்குவதைக் கடந்து, சாதிய சிந்தனை என்பது வாழ்க்கை முறையாகவும், அதுவே சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் இயங்குகின்றது.
இடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது
இலங்கையில் இன - மத முரண்பாடுகளும், இன - மத பயங்கரவாதங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்து இருக்கின்றது. இது தோன்றாமல் இருக்கவும், தோன்றிய பின் அதைத் தடுக்கவும், இலங்கை இடதுசாரியம் என்ன செய்திருக்கின்றது? இன மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் எதை முன்வைத்திருக்கின்றது? இடதுசாரிய வரலாற்றில் எதையும் காண முடியாது. இதன் பொருள் இலங்கை இடதுசாரியம் என்பது சந்தர்ப்பவாத அரசியலை முன்னிறுத்திக் கொண்டு, வரட்டுத்தனமாக இயங்கியது, இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை?
நவதாராளவாத உலகில் எல்லாவிதமான (மத) அடிப்படைவாதங்களும் மேலெழுந்து, ஒன்றையொன்று ஒடுக்குகின்றனவாக மாறி – சமூக முரண்பாடாகவும் மாறியிருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னான ஏகாதிபத்திய கொள்கைகளே, இவை தோன்றுவதற்கு காரணமாக இருந்தது.
1917 ருசியப் புரட்சியும், 1950 சீனப் புரட்சியும், காலனிகளில் தேசிய ஜனநாயகப் புரட்சிகளும், உலக மக்களிடையே ஜனநாயக கூறுகளாக வளர்ச்சி பெற்றது. மக்கள் தன்னியல்பாக மதம் குறித்த நம்பிக்கைகளையும். நிலப்பிரபுத்துவ அடிமைதனங்களையும் களைந்த, நவீன ஜனநாயக சமூகமாக சமூகம் உருவாகி வந்தது. ஜனநாயகம், புரட்சி போன்ற எண்ணக்கருக்கள், நடைமுறை வாழ்வியலுக்கான போராட்டமாக மாறியது. இது இயல்பாகவே ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்புக்கு, அதன் காலனிய, அரைக் காலனிய, நவகாலனிய கொள்கைக்கும் எதிரானதாக இருந்தது. அதேநேரம் சோசலிசப் புரட்சியானது ஏகாதிபத்திய நாடுகளுக்குள்ளேயே சுரண்டலின் வீதத்தைக் குறைக்கவும், செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நிதியமாக பகிர்ந்து கொடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது.
பா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது
பா.ஜ.கவுக்கும் பிற கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்;? பா.ஜ.கவுக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?
இனம், மதம், சாதியை… முன்வைத்து செயற்படும் பாசிசக் கட்சிகளின் செயற்பாடுகளை, எதிர்த்துப் போராடும் ஒரு கட்சி தோற்று இருந்தால் மட்டுமே, ஏன் தோற்றனர் என்ற கேள்வியை எழுப்பமுடியும். அதேநேரம் பிரகாஷ் ராஜ், கன்னையா குமார்.. போன்றோர் தோற்றது ஏன் என்று கேள்வி எழுகின்றது.
கட்சி அரசியலை எடுத்தால் இந்துத்துவ பார்ப்பனிய பாசிசத்தை முன்வைக்கும் பா.ஜ.கவை எதிர்த்து, எந்தக் கட்சியும் மக்களை அணிதிரட்டவில்லை. மாறாக எல்லாத் தேர்தல் கட்சிகளும், அதே கொள்கையை கொண்டு இருக்கின்றது என்பதே உண்மை. வெற்றி பெற்ற தி.முக கூட இதற்கு விதிவிலக்கல்ல.
பொருளாதாரக் கொள்கையை எடுத்தால், நவதாராளவாதத்தை முன்னெடுப்பதையே அனைத்து தேர்தல் கட்சிகளும் முன்வைக்கின்றது.
பயங்கரவாதத்தை "தீவிரவாதமாக்கும்" இடதுசாரிய அரசியல் குறித்து
இலங்கையின் இன – மத முரண்பாட்டுக்கு எதிராக எந்த அரசியல் - நடைமுறை வேலைத்திட்டமும், இலங்கையின் இருக்கும் எந்த இடதுசாரியக் கட்சியிடமும் கிடையாது. இது தான் எதார்த்தம், இது தான் உண்மை. இப்படி செயலற்ற இடதுசாரியக் கட்சிகளின் கொள்கைக்கும் நடத்தைக்கும் ஏற்பவே, இன-மத ஓடுக்குமுறைகளை பூசிமெழுகுகின்றனர். இன-மதம் சார்ந்த பயங்கரவாத அரசியல் கூறுகளை அரசியல் நீக்கம் செய்து, அதை வெறும் தீவிரவாதமாக இட்டுக் கட்டுகின்றனர்.
இஸ்லாமிய மதத்தின் பெயரில் நடத்திய தற்கொலைத் தாக்குதலை "தீவிரவாதமாகவும்", இஸ்லாமிய அடையாளங்கள் மீது பேரினவாத மற்றும் பௌத்த அடிப்படைவாத ஒடுக்குமுறைகளையும் "தீவிரவாதமாக"வும், இலங்கை இடதுசாரிகளால் மட்டுமே இட்டுக்கட்டி காட்டமுடிகின்றது. இதற்கு பின்னால் இருப்பது, அரசியல் சந்தர்ப்பவாதமே.
பத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்
யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டது. சமூக உணர்வு கொண்ட சமூகக் கூறு, சிந்தனைமுறையாகவில்லை. சமூக உணர்வற்ற யுத்தகாலச் சிந்தனை முறை, தமிழ் மக்களை தொடர்ந்து தோற்கடிக்கின்றது.
இன்றைய அஞ்சலிகளும், நினைவுகளும் யாரை முன்னிறுத்தி, எந்த அரசியல் பின்னணியில் செய்யப்படுகின்றது? தனிப்பட்ட சுயநல நோக்கங்களின்றி தம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்களை, அரசியல்ரீதியாக இனம் காட்டி அஞ்சலி செய்யப்படுகின்றதா? இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே, தங்கள் வாழ்க்கையையும் - உயிர்களையும் அர்ப்பணித்த மனித உணர்வுகள் முன்னிறுத்தப்படுகின்றதா? இல்லை. அஞ்சலிக்குரிய தியாகிகள். ஒரு நாளும் தமிழனைத் தமிழன் ஒடுக்கி ஆள்வதற்காக தம்மைத் தாம் அர்ப்பணித்தவர்கள் அல்ல என்ற உண்மை முன்வைக்கப்பட்டு, அவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனரா? இல்லை. மாறாக மக்களை ஒடுக்கும் தரப்பு, மரணித்தவர்களின் நோக்கை மூடிமறைக்கவே போலி அஞ்சலிகளையும் நினைவுகளையும் பேணுகின்றனர்.