Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

யாழ் குடாவில் இடதுசாரிய முன்னணி பிரச்சாரம்: (படங்கள்)

நேற்றும் இன்றும் (28-29/12/2014) இடதுசாரிய முன்னணி தனது பிரச்சார நடவடிக்கையினை யாழ் குடாவில் முன்னெடுத்திருந்தது. இடதுசாரிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுக தலைமையில் இப்பிரச்சார நடவடிக்கை கொள்ளப்பட்டது.

குறிப்பாக சங்கானை, சுன்னாகம், மருதனாமடம், பருத்தித்துறை, நெல்லியடி, வட்டுக்கோட்டை, ஊர்காவற்துறை, தொண்டமானாறு, சாவகச்சேரி, கிளிநொக்கி என பல இடங்களில் பிரச்சாரம் இடம்பெற்றது. இடதுசாரிய முன்னணி தோழர்கள், தோழியர்களுடன் ஆதரவாளர்களும் இணைந்து இந்த பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இடதுசாரிய மாற்றீடு என்னும் தலைப்பினைக் கொண்ட துண்டுப்பிரசுரம் பரவலாக பொது மக்கள் மத்தியில் நகரங்கள், சந்தைகளில் விநியோகம செய்யப்பட்டதுடன் தெருமுனைக் கூட்டங்களும் நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலான பொது மக்கள் ஆர்வத்துடன் துண்டுப்பிரசுரத்தினை கேட்டு பெற்றுக் கொண்டதுடன் தெருமுனைக் கூட்டத்திலும் பங்குபற்றி கேள்விகளை கேட்டு இடதுசாரிய முன்னணி பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.