Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

மட்டக்களப்பு நகரில் சயிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

நேற்று முன்தினம் (07-02-2017) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக மூடுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மாணவர்கள் நகரின் பிரதான வீதிகளின் ஊடாக ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி தமது எதிர்பினை காட்டி இருந்தனர். இந்த போராட்டத்திற்கு பாரிய அளவிலான மக்கள் ஆதரவினை காணக் கூடியதாக இருந்தது.