தமிழ் மாணவர் மீதான தாக்குதல்: பல்கலைக்கழகங்களுள் இனவாதத்தைப் புகுத்தும் பாசிசத்தின் முயற்சி!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 12 August 2014
- Hits: 848
சப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத பாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது.
இத்தகையோரே மருதானை சமூக சமய நிலையத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர் பற்றிய கூட்டத்தையும் குழப்பித் தடுத்தனர். இவ்வாறான அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் அனுசரணை வழங்கப்பட்டு வருவதுடன் பொலீசாரின் அரவணைப்பும் இருந்து வருவதையே காணமுடிகிறது. இவ்வாறான இன மத அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களின் வளர்ச்சியானது நாட்டில் உருவாகியுள்ள புதிய அபாயமாகும். இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஜனநாயக இடதுசாரி சக்திகளும் விழிப்புடனும் தூர நோக்குடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளதாகவே எமது கட்சி உணர்கின்றது.
அரசால் கடத்தப்பட்ட பல்கலை மாணவன் நிரோஷனின் விடுதலை கோரி பாரிய ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்ய கோரி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (8/8/2014) சப்ரகமுவ பல்கலைக்கழக வளாக பகுதியில் அனைத்து பல்கலைக்ககை மாணவர் ஒன்றியம் நடாத்தியது. இதில் பெரும் அளவிளான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பல்கலைக்க்கழகத்திற்கு வெளியால் ஊர்வலமாக சென்று நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.
பல்கலைக்கழகங்களின் உள் இனவாதத்தினை தூண்டிவிட்டு இரட்டை வேடம் ஆடாதே!
அரச பயங்கரவாதத்தை நிறுத்து!
போன்ற கோசங்களை முழங்கி, அரசின் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு பலியாகப்போவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும் போராட்டம் விஸ்த்தரிக்கப்படும் என அறிவித்தனர்.
அரசாங்கம் பல்கலைக்கழக மாணவனை கடத்தியுள்ளது!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 06 August 2014
- Hits: 1325
நேற்று (05) சப்பரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் அரசாங்கத்தினால் கட்தப்பட்டுள்ளான். குறிப்பிட்ட மாணவன் வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் யோகாராஜா நிரோஜன் என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாணவன் பல்கலைக்கழகத்தில் மூண்றாம் ஆண்டில் கல்வி கற்பதாக அறியக்கிடைக்கின்றது.
நேற்று ( 05 ) 09-12 மணிவரை பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது பரீட்சை அதிகாரியுடன் வந்த பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். இதை எதிர்த்து ஏன் அவரை கைது செய்தீர்கள் என்று கேட்ட மாணவர் சங்க தலைவர்களின் பல்கைலைக்கழக அடையாள அட்டையை பல்கலைக்கழக உயர் அதிகாரி பறித்து எடுத்துள்ளார்.
தோழர் தங்கவடிவேல் ஆசிரியர் அவர்களின் இறுதி நிகழ்வில், தோழர் இக்பால் அவர்களின் இரங்கல் உரை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 August 2014
- Hits: 3512
அன்பான தோழர்களே, நண்பர்களே, பொதுமக்களே!
மறக்க முடியாத மாமனிதர் ஆசிரியர் தங்கவடிவேல் அவர்கள். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வதிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் ஆசிரியர் என்னும் மாமனிதர் தனது 83ஆவது வயதில் இயற்கை எய்தினார். வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டியது இயற்கை நியதியே. இந்த வகையில் இவரது மரணமும் தவிர்க்க முடியாதது.
மனிதன் பிறக்கின்றான் இறக்கின்றான். அந்த இடைக்காலத்தில் அவன் என்ன பணிகளை ஆற்றியுள்ளான் என்பதே அவன் பிறந்ததன் பயனாகும். பலர் பயனில்லாமலே தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ளுகின்றார்கள். அமரர் தங்கவடிவேல் மாஸ்ரரும் அவரைப் போல் சிலரும் மக்களுக்கத் தொண்டர்களாக, மக்களின் பிரச்சினைகளை வென்றெடுக்கும் போராளிகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தங்கவடிவேல் தனது இளமைக்காலத்தில் காலம் சென்ற பருத்தித்துறை எம்பி பொன்கந்தையா அவர்களின் பாதங்களிலே வளர்ந்து இலங்கை கம்யூனிசக்கட்சியின் மாக்சிய லெனிசியக் கொள்கைகளை கம்பர்மலையிலும் அண்டிய ஊர்களிலும் பரப்புவதில் தீவிரமாக செயற்பட்ட ஒருவர்.
பத்து நாட்களில் வெளியேற வேண்டும் இல்லையேல் தமிழ் மாணவிகள் அனைவரும் கற்பழிக்கப்படுவீர்கள்! காடையர்கள் எச்சரிக்கை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 August 2014
- Hits: 3887
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் இன்று அதிகாலை பிரவேசித்த வன்முறையாளர்கள் சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் சங்கங்கள் தடை செய்யப்பட்டு இன்றுடன் 507 நாட்கள் கடந்துள்ள நிலையில்,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புரட்சிகர செவ் அஞ்சலி!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 August 2014
- Hits: 3671
தோழர் கணபதி தங்கவடிவேல் கடந்த 29.07.2014 இல் தனது எண்பத்திமூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் இளமைக்காலம் முதல் மாக்சிசத்தை ஏற்று அதன் வழியில் வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். சமூக ஏற்றத்தாழ்வையும் அதன் காரணமான சாதிய தீண்டாமைக்கெதிரான வன்மத்தையும் கொண்டிருந்தமை மட்டுமன்றி அதனை எதிர்த்து உடைத்தெறிய வேண்டும் என்ற புரட்சிகர உணர்வையும் கொண்டிருந்தார். அதன் காரணமாக சமூக அக்கறையாளனாகவும் சமூக விடுதலை நோக்கிய பாதையில் இளைஞர்களையும் மக்களையும் அணிதிரட்டி அமைப்பு வாயிலாகச் செயற்படுவதில் முன்னின்று வந்தவர்.
தம்மை எதற்கும் இழக்காத போராளிகள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 August 2014
- Hits: 2836
இழப்புகள் மிகுந்த வாழ்வு எனிலும், இழந்தவற்றை மீளப் பெறுகின்ற போரில் தம்மை எதற்கும் இழக்காத போராளிகள் சிலர் அண்மையில் மரணமடைந்தார்கள். தோழர் தவராசா, தோழர் குலரத்தினம், தோழர் தங்கவடிவேல் என்று வாழ்க்கையே போராட்டமாக, போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் மக்களிற்காக போராடினார்கள். சமுதாயத்தில் நிலவும் அநீதிகளிற்கு எதிராக போராடினார்கள். சமுதாயத்தை விட்டு விலகி தனித்து நின்று தாமொரு குழுவாய் போனவர்கள் போலில்லாமல், காட்டை விட்டு பறக்காத பறவையைப் போல் தம்மண்ணில் கால் பதித்து நின்று போராடினார்கள்.
இவர்கள் சாதி கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள். வாழ்நாள் முழுவதும் கரைய மறுத்த வறுமையை சுமந்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். கல்வியை தெய்வம் என்றும், கல்லூரியை ஆலயமென்றும் புளுகிப் பொய் சொல்லும் தமிழ்ச்சமுதாயத்தில் கோயில் உயர்சாதியினருக்கு மட்டுமே கதவை திறந்தது போல் பள்ளிகள், கல்லூரிகளும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கு கதவை திறக்காத கோட்டைகளாக இருந்தன. எடுத்த வெண்கட்டியால் எழுத முடியாது அவர்களை சாதியும், பணமும் தடுத்தன. எமக்கு வேறுவழி இல்லை என்று அவர்கள் அயர்ந்து போய்விடவில்லை. அஞ்சாது போரிட்டார்கள். தமக்கு மட்டுமின்றி தம் போன்ற மற்றவர்களிற்காகவும் போரிட்டார்கள்.
கோமாளிகளிடம் மன்னிப்புக் கேட்ட பாசிட்டுக்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 August 2014
- Hits: 2557
ஜெயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்களால் எதனைச் சாதிக்கமுடியும் என்ற தலைப்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
தமிழக முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமர் தொடர்பில் வெளியான கட்டுரைக்காக பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு கோரியமை தொடர்பில் இந்திய அரசாங்கம் திருப்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரை பின்னர் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளது.
படைப்பிலக்கியவாதி சாரல் நாடன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 August 2014
- Hits: 2351
மலையக படைப்பிலைக்கியத் துறையில் மறைக்க முடியாத பாத்திரமாக விளங்கும் சாரால் நாடன் அவர்களின் மறைவு ஈழத்து படைப்பிலக்கியத் துறையில் வெற்றிடத்தையும் மலையக மக்களிடயே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படைப்பிலக்கியம், ஆய்வு என இரு துறைகளிலும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சி.வி. சில சிந்தனைகள், தேச பக்தர் கோ. நடேசய்யர், பத்திரிக்கையாளர் கோ. நடேசய்யர், மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும், மலைக் கொழுந்து மற்றும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் என அவர் தந்த படைப்புகள் அவற்றின் தகவல்கள் மலையக மண் சார்ந்த வரலாற்று பதிவுகளாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குகின்றன.
இலங்கையில் தலையிட்டு தமிழரை அழிக்கக் கோரும் கருணாநிதி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 August 2014
- Hits: 2341
இலங்கை விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருக்கின்றதாக கூறி மு.கருணாநிதி குற்றஞ்சாட்டுகின்றார். அமெரிக்கா இலங்கையிலே தமிழ் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து அதிருப்தி வெளியிட்டுள்ள போதும், பக்கத்திலே உள்ள இந்தியா பாராமுகமாக இருப்பது உலகத் தமிழர்களுக்கெல்லாம் வேதனையை தருகின்றதாம்.