ஐ.நா பரிந்துரையானது - இனவாதத்தையே விதைக்கின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 20 September 2015
- Hits: 3280
ஐ.நா பரிந்துரைகளை "தமிழ்" தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் கூட்டமைப்பு மூலம் அதிகாரம் கிடைக்காதவர்கள், தங்கள் முரண்பாட்டை அரசியலாக்க சர்வதேச விசாரணை என்று ஒற்றைக்காலில் நின்று கூவுகின்றனர். இதற்கு அப்பால் புலிகளின் யுத்தக்குற்றம் குறித்தான பகுதி ஐ.நா பரிந்துரையில் இருப்பதால், புலி புலம்பெயர் குழுக்கள், பினாமிகள், ஆதரவுகள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். ஐ.நா விசாரணை வேண்டும் என்று கூறி ஐ.நாவை நோக்கி படையெடுத்தவர்கள் - தமக்கு எதிரான பரிந்துரைகளைக் கண்டு, ஐ.நா பரிந்துரையை தமது "தமிழ்" தேசிய வெற்றியாக பறைசாற்ற முடியாது நெளிந்தபடி - புலிகளின் யுத்தக்குற்றத்துக்கு சுயவிளக்கம் அளிக்க முற்படுகின்றனர்.
இனவாதம் ஒரு மூலதனம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 19 September 2015
- Hits: 6141
இலங்கையின் வரலாற்றைப் சற்றுப் பின்னோக்கிப் (1919ல் இருந்து) பார்த்தோமானால் அன்றிலிருந்து இன்றுவரை எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியாளும் ஆதிக்க சக்திகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாதம் என்ற மூலதனத்தை முதலீடு செய்து அதனை நன்கு அபிவிருத்தி செய்து வருவது புலனாகும்.
உள்ளக விசாரணையா? சர்வதேச விசாரணையா? மண்டையைப் பிளக்கும் மோசடி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 15 September 2015
- Hits: 3007
2009 இல் இறுதியுத்தம் நடந்த காலத்தில் சர்வதேசம் பற்றியும் - சர்வதேச தலையீட்டின் மூலமான மீட்சி பற்றியும் கூறி, புலிகளின் சுயமான சொந்த முயற்சியை முடக்கி முள்ளிவாய்க்காலில் புதைத்ததுதான், "தமிழ்த்தேசிய" வரலாறு. அன்று இந்த அரசியலை வழிகாட்டிவர்கள் தான், இன்று சர்வதேச - உள்ளக விசாரணை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். 2009 இல் சர்வதேச தலையீட்டை முன்னிறுத்தி - அதற்காக மக்களை யுத்த கேடயமாக மாற்றிப் பலி கொடுத்தவர்கள் - இன்று சர்வதேச விசாரணையைக் காட்டி, மக்களை அதே அரசியல் வழியில் செயலற்றவராகவும் - மந்தைகளாகவும் மாற்றுகின்றனர்.
தேசிய பிரச்சினைக்கு - தேசிய அரசால் தீர்வாம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 15 September 2015
- Hits: 2794
கூட்டமைப்பின் (பராளுமன்ற எதிர்கட்சிகளினதும் - அதன் தலைவரினதும்) ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு தேசிய அரசிடம் கோருகின்றார். அதேநாள் நாட்டின் பிரதமர் ரணில் முழுப் பாராளுமன்றமும் இன்று ஒரு அரசாங்கமாக மாறி வருவதால், நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்க ஒத்துழைக்குமாறு கோருகின்றார்.
"யாழ் வீதியில் தனியாக நடமாடக் கூட முடியாத நிலையில் உள்ளேன்" அரசியல் கைதியின் மனைவி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 September 2015
- Hits: 2933
12.09.2015 அன்று அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தின் போது, கைதிகளின் மனைவி ஒருவரின் இக் கூற்று - இரண்டு அடிப்படை விடையங்களை பறைசாற்றுகின்றது.
1. அரசியல் கைதிகள் என்று யாரும் இலங்கையில் கிடையாது என்ற முகமாற்ற "நல்லாட்சி" அரசாங்கத்தின் நிலையையும் - கைதிகளுக்காக தேர்தலுக்கு முன்பு சமவுரிமை இயக்கம் போராடிய போது - சுமத்திரன் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பபட்டு விடுவார்கள் என்று கூறி - போராட்டத்தை தேர்தல் காலத்தில் தொடர்ந்து முன்னெடுப்பதை முடக்கியதையும் - இன்றைய இந்தப் போராட்டத்துடன் இனம் கண்டு கொள்ளக் கோருகின்றது.
உலகை மாற்றக் கூடிய உதாரணமும் - அதன் பலவீனங்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 12 September 2015
- Hits: 2817
ஐரோப்பா நோக்கிய அலை அலையான அகதிகளின் வருகையும் - அதை தடுத்து நிறுத்த முன்னெடுத்த ஏகாதிபத்திய கெடுபிடிகளையும் தகர்த்தது எது? ஏகாதிபத்திய தலைவர்களும் - ஏகாதிபத்திய ஊடகங்களும் அகதிகளின் பரிதாப நிலை பற்றியும் - அவர்களின் அவலங்கள் பற்றியும், கதைகதையாக கூற வைத்தது எது?
அகதிகளின் குருதி குடிக்கும் தமிழ் நாட்டு பொலிஸ்நாய்கள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 10 September 2015
- Hits: 3064
போலி கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைக்கு என்று பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மோகன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கு வைத்து அக்காவல்நிலைய ஆய்வாளர் என்னும் மிருகத்தால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை இனவெறி அரசுகளின் கொலைக்கரங்களிற்கு அஞ்சி அகதியாக தமிழ்நாடு சென்ற ஒரு தமிழனை தமிழ்நாட்டில் வைத்து கொலை செய்திருக்கிறார்கள். மோகனைக் கொலை செய்த அந்த மிருகத்தைக் காப்பாற்ற தமிழ்நாட்டு காவல்துறை தமது வழக்கமான ஈனத்தனங்களை முயற்சி செய்தது. மோகனில் உடலை பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முயன்றது. நீதி விசாரணைக்கு நீதிபதியை அழைக்காமல் இருக்க முயன்றது. ஈழ மக்களின் தோழர்கள் போராடிய பின்பே உடற்பரிசோதனை நடந்தது.
ஜனநாயகத்தை மறுத்து - சதியை அரசியலாக்கும் கூட்டமைப்பு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 06 September 2015
- Hits: 3039
கூட்டமைப்பு தன் கட்சிக்குள் தொடங்கி நாட்டின் பிரச்சனைகள் வரை, சதிக் கும்பலின் கூடாரமாக - அதையே அரசியல் நடத்தைகளாக அரங்கேற்றுவதைக் காணமுடியும். புலிகளின் 2009 முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றிய அதே அரசியல் சதிகள், இன்று பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு அரங்கேற்றுகின்றது. கூட்டமைப்பிடம் ஜனநாயகம் கிடையாது. மக்களுக்கு பதில் சொல்லும் தார்மீக பொறுப்பும் - நேர்மையும் கிடையாது. மேற்குநாடுகளின் கைக்கூலிகளாக மாரடிக்கின்ற அரசியலைத் தவிர, அதனிடம் வேறு எதுவும் கிடையாது.
விளங்கிக் கொள்ளாவிட்டால், விலகிக் கொள்ளட்டும்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 03 July 2014
- Hits: 5119
யாழ்ப்பாணத்தில் பிரசன்ன விதானகே இயக்கிய "பிறகு" (WITH YOU, WITHOUT YOU) சிங்களமொழி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இத்திரைப்படம் புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டின் சென்னையிலும் திரையிடப்பட்ட போது நாம் தமிழர் அமைப்பு போன்ற தமிழின வெறியர்களும், சில புலம்பெயர் அறிஞர் பெருமக்களும் இது தமிழ்மக்களிற்கு எதிரான படம் என்றும் இலங்கை அரசையும், இராணுவத்தையும் நியாயப்படுத்தும் படம் என்றும் கண்டு பிடித்திருந்தார்கள். இன்று போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களிற்கு எதிரான படம் என்று எவரும் யாழ்ப்பாணத்தில் சொல்லவில்லை. அறிஞர் பெருமக்களும், ஆசாமிகளும் எங்கே காணாமல் போய் விட்டார்கள்?. இவர்களின் பொய்களையும், திரிபுகளையும் எதிர்த்து அன்று வெளிவந்த கட்டுரை.
அஞ்சலிகளும், ஆலவட்டங்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 September 2015
- Hits: 3037
சமூகம் குறித்து அக்கறையுடன் செயலாற்றுவதாக கூறும் பலர், அண்மையில் மரணித்த ஒருவரின் தன்னார்வ நிதி சார்ந்த ஏகாதிபத்திய செயற்பாடுகளையும் - ஏகாதிபத்திய நலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்த உண்மைகளை மறைத்து, அவருக்கு அஞ்சலிகள் செலுத்தினர். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் "அரசியல் - இலக்கியம் - கலைகளின்" பெயரில், நவதாராள - உலகமயமாதலை முன்னெடுத்த நபர்களுக்கு முண்டு கொடுத்து அதற்கு சாமரம் வீசினர். இந்த வகையில்