ஐரோப்பா வரும் அகதிகளைத் தடுக்க முட்கம்பி வேலிகள்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 03 September 2015
- Hits: 2955
இலட்சக்கணக்கான அகதிகளும் - ஆயிரக்கணக்கான பிணங்களும் குவிய, அகதிகள் வரும் பாதைகளை குறிவைத்து பல கிலோமீற்றருக்கு முட்கம்பி வேலிகளை மேற்குநாடுகள் அமைக்கின்றது. மத்திய கிழக்கில் மரணத்தில் இருந்து தப்பியவர்கள் - ஐரோப்பாவில் அகதிப் பிணமாகி மிதக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்களும் பெண்களும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 30 August 2015
- Hits: 1351
ஆசியப் பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட (1931ல்) முதலாவது நாடு இலங்கையாகும். 1960ல் உலகத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார். பின்னர் 1970ல் தெரிவு செய்யப்பட்டு 7 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது மகள் திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்கா 1994ல் பிரதமராகவும் பின்பு இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்புடன் (1994 - 2005) ஆட்சிக்கு வந்த போது சிறிமா அவர்கள் பிரதமராக 14 நவம்பர் 1994 முதல் 9 ஆகஸ்ட் 2000 வரை செயலாற்றினார். இவர்களது ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிராக எத்தனையோ கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தும்; இலங்கையில் பெண்களுடைய உரிமைகளுக்காக இவர்களால் எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏகாதிபத்திய கொள்கைகளே - அகதிகளின் மரணத்துக்கு காரணமாகும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 29 August 2015
- Hits: 3145
தொடரும் நூற்றுக்கணக்கான அகதிகளின் மரணமும் - பல்வேறு தேச மக்கள் பல முனைகளில் அகதிகளாக மேற்கு நோக்கிய படையெடுப்பும், ஐரோப்பாவையே குலுக்கி வருகின்றது. மேற்கின் ஜனநாயகமும் - மனிதாபிமானமும் காணாமல் போக - இன, நிறவாத அரசியல் முன்னுக்கு வருகின்றது. நாசிக் கட்சிகளின் செல்வாக்குகள் அதிகரிக்கின்றது. மேற்கில் மூலதனமும் - செல்வமும் சிலரிடம் குவிவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியானது, அகதிகளின் வருகையுடன் மேலும் தீவிரமாகி வருகின்றது. மேற்கில் அமைதி என்பதை- இந்த அமைப்பு முறை இனி சாத்தியமற்றதாகி இருக்கின்றது.
பொருளாதார உதவிகள் சமூகத்தை மாற்றுமா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 28 August 2015
- Hits: 2972
பணத்தால் எதையும் வாங்க முடியும் - பணத்தால் எதையும் மாற்ற முடியும் - பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற பொது சமூக உளவியலே, இன்று வடகிழக்கு மக்கள் சார்ந்த புலம்பெயர் உதவிகளாக மாறி இருக்கின்றது. உதவியை பெறுபவன் சமூக உணர்வுடன் பெறாத வரை - சமூக உணர்வை வளர்க்காத உதவிகள், தகுந்த சமூக பயன்பாட்டை பெறுவதில்லை. மறுபக்கத்தில் பணத்தைக் கொண்டு சமூக அந்தஸ்தை பெறும் சுயநலம் சார்ந்த கண்ணோட்டம், எந்த சமூக பிரயோசனமுமற்ற கோயில்களைக் கட்டும் அதேநேரம், ஊழலுக்குள் - மோசடிக்குள் சமூகத்தை மூழ்கடித்து விடுகின்றனர்.
சாதி மேலாதிக்கவாதத்தின் உற்பத்திப் பொருளே இனவாதம்...
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 27 August 2015
- Hits: 1990
1930ல் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியாசனமுறை அமுல்படுத்தப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அதனை அமுல்படுத்திய பாடசாலைகளை உயர்சாதியினரும், அதனை அமுல்படுத்தாத பாடசாலைகளை பாதிக்கப்பட்ட சாதியினரும் தீ வைத்துக் கொழுத்தினர்.
வடகிழக்கு எங்கும் கோயில்கள் கட்டப்படும் பின்னணி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 26 August 2015
- Hits: 3269
வடகிழக்கில் பணம் சார்ந்த செயற்பாடுகளானது, ஊழலுக்கும் - மோசடிக்கும் உள்ளாகின்றது. பாராளுமன்ற அரசியல் என்பது பணம் சம்பாதிக்கவும் - பொறுக்கித்தனமாகத் தின்று குடிக்கும் தங்குமிடமாக எப்படி உணரப்படுகின்றதோ, அப்படி சமூகம் சார்ந்த பணச் செயற்பாடுகள், சுருட்டும் இடமாக மாறி இருக்கின்றது. பணரீதியாக சமூகத்துக்கு உதவுகின்றவர்கள் - இதை தடுக்க கண்காணிப்புகளையே மாறாக உருவாக்க முயலுகின்றனர். சமூக உணர்வற்ற சமூகத்தை தக்கவைத்துக் கொண்டு, சமூக உதவிகள் என்பது வெளிப்பூச்சாக மாறுகின்றது.
தமிழ் "தேசியம்" வாக்கு வங்கிக்கான கோசமாக சீரழிந்து விட்டது!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 23 August 2015
- Hits: 2977
தமிழ் "தேசியம்" என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் அரசியல் பொருள் அற்றதாக மாறியிருக்கின்றது. "தேசியம்" இன்று தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளால் "திடீர் தேசியமாக" உச்சரிக்கப்பட்டு உசுப்பேற்றப்படும் - வாக்கு வங்கிக்கான உணர்ச்சிக் கோசமாக எஞ்சி இருக்கின்றது. தமிழன் தமிழனுக்கு வாக்களிக்க வேண்டும் - தமிழன் தான் தமிழனை அடக்கியாள வேண்டும் என்று இனவாதம் வக்கிரமாகி இருக்கின்றது.
மதங்களும் மக்களுக்கு இடையிலான பிரிவினைகளும் !!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 22 August 2015
- Hits: 4002
புலிகள், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து துரத்தியதினாலும், காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து தொழுது கொண்டிருந்தவர்களை கொன்றதினாலும் கோபங் கொண்ட அல்லா தானாம் புலிகளை அழித்து விட்டார் என்று சில அறிவிலிகள் உளறுகிறார்கள். அவர்கள் இதோடு நிறுத்தியிருந்தால் நமக்குப் பிரச்சனை இல்லை. ஏனென்றால் இது நமக்கு அறிவீனம், மூடநம்பிக்கை, முட்டாள்தனமாக இருந்தாலும் மதவாதிகள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் மதம் என்ற கற்பனையை நம்புபவர்கள், எனவே தமது கற்பனைக்கதைகளுடன் காலத்தை கழிக்கட்டும் என்று விட்டு விடலாம்.
"மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" நூல் வெளியீடு (படங்கள்)
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: படிப்பகம்
- Created: 19 August 2015
- Hits: 1252
போராட்டம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் "மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" என்ற பெயரில் இன்று புத்தகமாக - தொகுப்பாக வந்துள்ளது. இன்று (19.08.2015) வட்டுக்கோட்டையில் நடைபெற்ற காலஞ்சென்ற சிவசிங்கராசா சிவசம்பு மற்றும் அவரது துணைவியார் நாகம்மா ஆகிய இருவரினதும் முறையே இரண்டாவது, முதலாவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி "மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" எனும் நூல் வெளியீட்டின் போது, முதற்பிரதியினை முன்னணிப் பதிப்பகத்தின் சார்பில் தோழர் வன்னியசிங்கம் வெளியிட்டு வைக்க, திரு.இரத்தினம் ஜெயராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தேர்தலில் "முற்போக்குகளின்" சிந்தனை முறை!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 August 2015
- Hits: 2874
அரசியல் - இலக்கியம் - கலை என்று தங்களை "முற்போக்காக" காட்டிக் கொள்கின்றவர்கள் பெரும்பாலனவர்கள், தேர்தலின் போது தன் இனத்தில் இருந்து அணுகுகின்ற இனவாதத்தையே முன்தள்ளினர். இனவாதத்துக்கு எதிரான சிந்தனை முறை என்பது, தன் இனத்தைக் கடந்து அனைவரையும் மனிதனாக அடையாளப்படுத்தி அணுக வேண்டும். தமிழன் - சிங்களவன் என்ற குறுகிய இன அடையாளங்களில் இருந்து தேர்தலை அணுகுவதானது இனவாதத்தின் உள்ளடக்கமாகும். இடதுசாரிகள் மட்டும் தான் இனவாதத்துக்கு எதிராக அனைவரையும் மனிதர்களாக அடையாளப்படுத்தும் அதேவேளை தன் இனத்தை முன்னிறுத்தி தேர்தலை அணுகுவதில்லை.