முற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்
இந்தியப் பார்ப்பனியமானது திருவள்ளுவருக்கே காவியை அணிவிக்கின்றது. பகத்சிங்கை தூக்கிட்ட போது, கீதையையே கையில் வைத்திருந்ததாக கூறுகின்றது. தீண்டாமையே இந்து மதம் என்று கூறி இந்து மதத்தில் இருந்து விலகிய அம்பேத்கருக்கு, பார்ப்பனியம் காவி முலாம் பூசுகின்றது. இதன் மூலம் தான் அல்லாத அடையாளங்களை காவிமயப்படுத்தி பார்ப்பனியமாக்குகின்றது. இலங்கையில் வெள்ளாளியச் சிந்தனையோ ஒடுக்கியோரையும், ஒடுக்குவோரையும் "தோழர்கள்" என்றும், மரணிக்கும் போது "புரட்சிகர செவ்வணக்கம்" செய்வதன் மூலம், புரட்சிகர அரசியல் கூறுகளை அழிக்கும் வெள்ளாளியச் சிந்தனையாக மாற்றுகின்றது.
தங்களை முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொண்டு, ஒடுக்கும் அரசியல் பின்னணியில் தவழுகின்ற பொறுக்கிகள் தான், இந்த வெள்ளாளியச் சிந்தனைமுறை மூலம் ஒடுக்குமுறையாளருக்கு உதவ முனைகின்றனர்.
மக்கள் மத்தியில் புரட்சிகர சிந்தனையோ, அதற்காக உண்மையான நேர்மையான நடைமுறையோ இருக்கக் கூடாது, மாறாக தங்களைப் போல் ஒடுக்குமுறையாளனுடன் பொறுக்கித் தின்னக் கோருகின்றனர்.
ஒடுக்குவோருக்கு ஒத்தடம் கொடுக்கும் இந்த "ஜனநாயக" கூத்தாடிகள், தங்களைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இழிந்து போன வாழ்க்கையை வாழ்ந்து மரணித்த பிண்டங்களுக்கு, "புரட்சிகர" அஞ்சலிகளை தெரிவிக்கின்றனர். இதுதான் ஒடுக்கும் யாழ் வெள்ளாளிய சிந்தனைமுறையிலான போலியான இடதுசாரிய அஞ்சலிகள். ஓடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்காத தங்களையும், தங்கள் சுய இருப்பையும் தக்கவைக்கும் ஒப்பாரிகளாகும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல், வன்மாகவே பரிணமிக்கின்றது.
இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கும் சிந்தனைமுறையில் உருவான இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து உருவானதல்ல. மாறாக ஒடுக்கும் வெள்ளாளியச் சிந்தனைமுறையில் உருவான தமிழ் தேசிய இயக்கங்களோ, இந்தியா மற்றும் அமெரிக்காவின் கைக்கூலிகளாக மாறினர். அரசியல்ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் அவர்களின் கால்களை நக்கியே வாழ்ந்தனர். இதில் ஒரு பகுதியினர் இலங்கை அரசுடன் கூடி, ஒடுக்குமுறையாளராக மாறி ஒடுக்கியதன் மூலம் நக்கித் திரிந்தனர். இன்று அதன் எச்சசொச்சங்கள் எல்லாம் அதையே தொடர்வதுடன், அதில் பயணித்த நபர்கள் தங்கள் கடந்த காலத்தையோ நிகழ்காலத்தையோ விமர்சனமோ, சுயவிமர்சனமோ செய்வது கிடையாது.
அன்று இந்த இயக்கத்தின் மக்கள்விரோத போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இப்படி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, தங்களைத் தாங்கள் யார் சுயவிமர்சனம் செய்யவில்லையோ, யார் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்னிறுத்தி இன்று தங்களை முன்னிறுத்தவில்லையோ, அவர்கள் தான் இன்றைய சமூகத்திற்கு நஞ்சிடுபவர்களாக இருக்கின்றனர். அதாவது அன்று கொல்லப்பட்டவர்களின அரசியல் சார்ந்து அக்காலத்தை யார் விமர்சனம் செய்யவில்லையோ, அவர்கள் தான் அக்காலத்தில் கொலையாளிகள். இன்று தங்கள் பன்னாடைத் தனத்தைக் கொண்டு, சமூகத்தை கொத்தித் தின்ன முனைகின்ற கழுகுகளாக வலம் வருகின்றனர்.
கோத்தபாய முன்வைக்கும் "சமவுரிமையும்", கண்கட்டு வித்தைகளும்
எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான ஒடுக்குவோரை அனுசரித்து, எண்ணிக்கையில் சிறுபான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வதே "சமவுரிமை" என்கின்றார்.
இப்படி எண்ணிக்கையைக் கொண்டு ஜனாதிபதியான கோத்தபாய, இனவொடுக்குமுறையை நியாயப்படுத்தியிருக்கின்றார். இனவொடுக்குமுறையை இல்லாதாக்குவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறும் கோத்தபாய, ஒடுக்கப்பட்ட இனங்கள் வாழும் பகுதியை அபிவிருத்தி செய்வதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கின்றார்.
அதாவது ஒடுக்கப்படும் இனங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட வேண்டும் என்று சிங்கள மக்கள் கோருகின்றனர் என்று கூறி ஒடுக்குவதும், அதேநேரம் சிங்கள மக்கள் அபிவிருத்தி மூலம் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறி, அதை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு தரப்போவதாக கூறுவது பித்தலாட்டம். இதுதான் எதார்த்தம் என்று கொண்டாடுகின்றது, கோத்தபாயவுக்கு ஆதரவான ஒடுக்கப்பட்ட இனத்தின் எடுபிடிகள்.
அபிவிருத்தி என்ற பெயரில் அரங்கேறும் நவதாராளவாதத் திட்டங்கள், சிங்கள மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வியலில் மகிழ்ச்சியை வித்திட்டு இருக்கின்றதா!, எனின் இல்லை. மாறாக வறுமையையும், சூழல் சிதைவுகளையும், நுகர்வு வெறிப் பண்பாட்டையும், மகிழ்ச்சியற்ற உளவியல் சிதைவையும் கொடுத்திருக்கின்றது. இதைத்தான் ஒடுக்கப்பட்ட இனங்கள் கோருவதாகவும், அதை கொடுக்கப்போவதாகவும் கூறுகின்றார்.
இதைத்தான் கோத்தபாய "சமவுரிமை" என்கின்றார். ஒடுக்கும் பெரும்பான்மையின் கருத்தியலுக்கும் - அதன் நடைமுறைகளுக்கும், அடங்கியொடுங்கிய சிறுபான்மையின் சுய நடத்தையே "சமவுரிமை" என்கின்றார். அதாவது தங்கள் அரசு அதிகார சமூகப் பொருளாதார வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கு தாமாக இணங்கி வாழ்வதே சமவுரிமை என்கின்றார்.
அரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக!?
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள், ஒடுக்கும் தேசிய இனத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசில் அங்கம் வகிப்பது எதற்காக!? இது ஒடுக்கப்பட்ட மக்களின் கேள்வி.
அரசில் அங்கம் வகிப்பதற்கு அவர்கள் கூறுவது, தன் இனத்திற்கு, தன் மதத்துக்கு, தன் சாதிக்கு, தன் பிரதேசத்துக்கு சேவை செய்வதற்காகவே என்கின்றனர். இப்படி தமிழ், மலையக, முஸ்லிம் தரப்புகள் கூறுவதுடன், தங்கள் பதவி மற்றும் அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயாராகவும் இருக்கின்றனர்.
தங்கள் பதவிகள் அதிகாரங்கள் மூலம் தன் இனம் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகவம், தன் இனத்திற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர். இப்படி காலத்துக்கு காலம் அரசுகளுடன் இணைந்து செயற்படும், மலையக, முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள், தாங்கள் அரசுடன் சேரவிட்டால், எந்த அபிவிருத்தியும் நடந்திருக்காது என்கின்றனர்.
இப்படி அபிவிருத்தியாக காட்டப்படும் திட்டங்களும், அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பும், அரசு மற்றும் இனரீதியாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் தேசிய கொள்கையினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உலகளாவில் உற்பத்தி மூலதனத்தை விட நிதிமூலதனம் குவிந்து விட்ட நிலையில், குவிந்த பணத்திற்கான வட்டி மூலம் மேலும் கொழுக்க வைக்கும் உலகமயமாக்கல் கொள்கையே, நாட்டின் அபிவிருத்தியாக – வேலைவாய்ப்பாக முன்தள்ளப்படுகின்றது.
இங்கு தேசம், தேசியம், உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் அடிப்படையில், எந்த அபிவிருத்திக்கும் இடமில்லை. நிதி கொடுப்பவன் அதை அனுமதிப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வட்டியை மட்டுமின்றி, உற்பத்தியை மக்கள் நுகராது ஏற்றுமதி செய்ய வைப்பதன் மூலமும், வட்டி அறவிடப்படுகின்றது. இந்த கொள்ளைக்கு வரும் சர்வதேச நிதி தான், அரசும் அரசுடன் கூடிக்குலாவும் தரப்புகளும் முன்வைக்கும் அபிவிருத்தி. இந்த அபிவிருத்தி நடந்தால் தான், ஊழல் செய்யமுடியும். ஊழல் செய்வதற்காகவே அரசிடம் அதிகார பதவிகளை பெறுவது நடந்தேறுகின்றது.
ஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 December 2019
- Hits: 150
கீழ்வரும் வரிகள், அதிமேதகு மாட்சிமைக்குரிய ஜனாதிபதி நந்ததேச கோ. ராஜபக்ஸ அவர்கள், பதவியேற்றபின் இந்திய ஊடகமான பாரத் சக்தி Shakti.in மற்றும் SNI -இக்கு வழங்கிய பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை.
இவ்வசனங்கள் இலங்கையின் தேசியப்பிரச்சனை பற்றி அவரிடம் ஊடகவியலாளர் நிதின் கோக்கல Nitin A.Gokhale வினவியபோது உதிர்த்தவை.
தன்னை இனவாதி அல்ல என்று குறிப்பிடும் அவர், தேசியப்பிரச்னைக்கு ஒரே தீர்வு பொருளாதார அபிவிருத்தி மட்டுமே என திட்டவட்டமாகக் கூறுகிறார்.
எனக் கூறும் நந்தசேன ராஜபக்ஷ, உண்மையிலே இனவாத சிந்தனை அற்றவரென்றால் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார்.
//"நாங்கள் பவுத்தர்கள். எமது நாடு சமாதானமானது. நாங்கள் மிகவும் அமைதியான சமாதானமான தேசத்தவர். எமது வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. எமக்கேயான சமூகப் பெறுமானங்களும் மதிப்புகளும், வளமான கலாச்சாரமும் உள்ளது."//
அதாவது : அவருக்கு இனவாதம் இல்லை என்றால், இலங்கையை பவுத்த நாடு என்று அவர் கூறியிருக்க மாட்டார். இலங்கையை ஒரு பல்லின -பல மத - தேசமென்று கூறியிருப்பார். இங்கு அவர் இலங்கையை ஒரு பவுத்த சிங்கள தேசமென்றே வரையறுக்கின்றார். இது தான் சிங்கள-பவுத்த பேரகங்கார வாதத்தின் அடிப்படை. நந்தசேன கோ. ராஜபக்ஷவைப் பொறுத்தளவில், இலங்கை அல்லது ஸ்ரீ லங்கா பவுத்த- சிங்களவரின் நாடு. மற்ற இனங்கள் இங்கு சீவிக்க விரும்பினால், சிங்களவர்களை சீண்டாது, எந்த வித உரிமைகளையும் கோராது, சாப்பிடுவதற்கு மட்டும் வாயை திறந்தால் போதுமெனக் கூறுகிறார்.
புலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே
நவம்பர் 26, 27 முன்னிறுத்தி புலிகள் பிரபாகரனின் பிறந்த தினத்தையும், புலிகளின் மாவீரர் நாளையும் நினைவுகொள்வதை எதிர்த்து, புலியெதிர்ப்புப் புராணங்கள் பாடப்படுகின்றது.
புலிகள் செய்த மனிதவிரோதக் குற்றங்களையும், அது ஏற்படுத்திய சமுதாயப் பின்னடைவுகளையும் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த போலியான பொது விம்பத்தைக் கட்டமைத்துவிட முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு ஒளிவட்டம் போடுவதன் மூலம், சமூகத்தை தவறாக வழிநடத்த முனைகின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் தேச மற்றும் தேசிய உணர்வை மழுங்கடிக்கவும், அதேநேரம் ஒடுக்கும் பேரினவாதத்தை பாதுகாக்கவும் முனைகின்றனர். இப்படிப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல் என்பது சாராம்சத்தில் பேரினவாதத்தை ஆதரிப்பதுடன், புதிதாக பேரினவாத ஆட்சிக்கு தலைமை தாங்கும் கோத்தபாயவை முன்னிறுத்துவதும் நடந்தேறுகின்றது.
இந்த பின்னணியில் முன்பு புலம்பெயர் நாடுகளில் ஜனநாயகத்தை முன்வைத்து, ஒடுக்கும் பேரினவாத அரசுக்கு ஆதரவான புலியெதிர்ப்பாக சீரழிந்தவர்களைக் காண முடியும். இவர்களுடன் புலிப் புராணம் பாடி அண்டிப் பிழைத்தவர்களும், இன்று புலியெதிர்ப்பு புராணம் பாடுகின்றனர். இன்று இவர்கள் ஆளும் தரப்புகளுடன் கூடிப் குலாவுவதன் மூலம் பிழைக்கும் புலியெதிர்ப்பாகும்.
கோத்தபாய நல்லவராம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 26 November 2019
- Hits: 219
தற்போது, இலங்கையின் அரசஅதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களையும், ராஜபக்ச குடும்பத்தையும் எவ்வாறு புரிந்து கொள்வது,- என்பது பற்றி கட்டுரைகளும் கருத்துக்களும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி குவிக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை - கருத்துக்களை பெரும்பாலும் எழுதுவோர், தற்போது வடக்கு -கிழக்கு தமிழ் சமூகத்தில் கருத்தியல்ரீதியாக சமூகத்தை சென்றடையக்கூடிய எழுத்தாளர்களாகவும், பிரபலமான "அரசியல்" ஆய்வாளராகவும் இருக்கின்றனர்.
இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் கடந்த காலத்தில் புலிகளுக்கும் பிரச்சார பீரங்கிகளாகவும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம், படுகொலைகள், பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களாகவும் ஆகவும் விளங்கியவர்கள்.
இவர்கள் தற்போது வேறு, வேறு கட்சிகளை பின்கதவால் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், தங்களுக்குள் அரசியல்ரீதியான சில முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும், கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் அரசியல் போக்குகள் பற்றி மிகவும் நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். தம்மை அதிகாரத்துக்கு எதிரான சக்திகள் என கூறிக்கொள்வதில் இன்பமடையும் இவர்கள், அடிக்கடி பாவிக்குமோர் சொல் "அரசியல் அறம்". புலிகளுக்கு காவடி தூக்குவதற்கு முன், இவர்கள் உறுப்பினராகவிருந்த இயக்கங்களுக்காகச் செய்த கொலைகள், கொள்ளைகள் தொடக்கம் இன்று அதிகாரத்தில் இருக்கும் மஹிந்த குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டிருப்பது வரையான இந்த காலத்தில் - இவர்களின் "அரசியல் அறம்" எங்கு போனதென்று இவர்களால் பதில் கூற முடியாது. "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி" என்பது தான் இவர்களில் அரசியல் அறம்.
ஒடுக்குவோரை "தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்" என்று கூறுவதன் பின்னால் ..
ஆளுகின்ற ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளை "தோழர்" என்கின்றனர். "கம்யூனிஸ்ட்" என்கின்றனர். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளை "கம்யூனிச நாடு" என்கின்றனர். இப்படி அழைப்பதன் மூலம் கட்டமைக்கும் அரசியலானது, ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதை தடுக்கின்ற, ஒடுக்கப்பட்ட உணர்வுடன் மக்கள் தமக்குள் தோழமை கொள்வதை வெறுக்கின்ற, ஆளும் வர்க்க அரசியல் சிந்தனைமுறையாகும்.
சமூக உணர்வற்ற தனிநபர்வாத பிழைப்புவாதமானது, மனிதனுக்குரிய சமூக அறங்களையே மறுத்து விடுகின்றது. இதன் மூலம், தங்கள் நடத்தையை "தோழமையானதாக" கூறிக் கொண்டு, சமூகத் தன்மையிலான மனித உணர்வை சிறுமைப்படுத்த முனைகின்றனர்.
மனித உணர்வு கொண்ட சமுதாயத்தினை மீட்டெடுக்கும் உள்ளார்ந்த உணர்வும், அதற்காக இணைந்து கொண்டு செயற்படும் தோழமையுடன் கூடிய நடைமுறையுமே, தோழராக அழைக்கத் தகுதி பெற்றது.
சமுதாய உணர்வு தான் தோழமை. மனிதனை ஒடுக்கிவாழும் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான சமுதாய உணர்வு தான், தோழமைக்கான சமூக அடித்தளம்.
ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி?
தேசிய இனங்களும், தேசங்களும் ஒடுக்கப்படுவதையே, தேர்தல் முடிவுகள் மீளவொருமுறை பறைசாற்றி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்கள் மொழி மற்றும் தாங்கள் பின்பற்றக்கூடிய மதம் சார்ந்து, புதிய ஆட்சியை ஒடுக்கும் இனத்தினது மொழி மற்றும் மதத்தின் அதிகாரமாக - வன்முறையாக காண்கின்றனர். ஆளும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றவர்கள், கடந்தகால யுத்தத்தின் விளைவாகவே தமிழ்மொழி பேசும் மக்கள், தமக்கு எதிராக வாக்களித்தனர் என்று காரணத்தைக் கற்பிக்க முனைவதன் மூலம், இன-மத ஒடுக்குமுறையை மூடிமறைக்க முனைகின்றனர். நேரடியாக யுத்தத்தைச் சந்தித்த தமிழ் இனம் மட்டும் எதிர்த்து வாக்களிக்கவில்லை, மாறாக முஸ்லிம் - மலையக மக்களும் கூட எதிர்த்து வாக்களித்து இருக்கின்றனர்.
யுத்தத்துக்குப் பின்னர் நடந்தேறிய இன-மத வன்முறைகள், இனமத பிரச்சாரங்களின் பின்னணியில், மகிந்த தலைமையிலான இன்றைய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது உலகறிந்த உண்மை. ஆட்சியைக் கைப்பற்ற இந்த இன-மத ஒடுக்குமுறை பெருமைகளை முன்னிறுத்தியும், அதைத் தொடர்வதற்கான அதிகாரத்தையும் கோரிப் பெற்றனர் என்பதே உண்மை. இதை ஒடுக்கப்பட்ட இனங்கள் பிரதிபலித்தன.
தமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம்! கோத்தாவுடன், மோடி பேச்சாம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 22 November 2019
- Hits: 252
கோத்தபாய இலங்கை சனாதிபதியாக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளேயே(19.11.2019), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர், மற்றும் ஐம்பது பேர் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கொழும்புக்கு வருகை தந்தனர். சிலமணிநேரங்கள் கொழும்பில் தரித்து நின்ற இவர்கள் கோத்தபாய, அவரின் அண்ணனார் மஹிந்த உட்பட ரணில் மற்றும் சில முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டுச் சென்றனர்.
"மரியாதையின் நிமித்தம் அரச அதிபர் கோத்தபாயவை சந்தித்தேன். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை இறுக்கமடையச் செய்யும் விதத்தில், நாம் அவரை இந்தியாவுக்கு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஒன்றிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன்" என அறிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர்.
ஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பேரினவாதத்துக்கு எதிராக, தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். கடந்தகால அனுபவமும், தேசங்களினதும் - தேசிய இனங்களினதும் சமவுரிமையை மறுக்கும் தேர்தல் கட்சிகளின் பிரச்சாரமுமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இனவொடுக்குமுறை அதிகரித்துள்ளதையும், அதற்கு எதிராக தேர்தல் கட்சிகள் முதல் தனிநபர் செயற்பாட்டாளர்கள் வரை, யாரும் அக்கறையற்றுக் கிடப்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.
இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், சமவுரிமை கொண்ட தேசங்கள் - தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை முன்வைத்து, பெரும்பான்மை மக்களை அணிதிரட்ட வேண்டிய இடதுசாரிகள், அரசியல்ரீதியாக செயலற்றுக் கிடப்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.
இன-மத ஒடுக்குமுறை மீதான தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் பொது அச்சத்தை, தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.