Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பல்கலைகழக மாணவனை விடுதலை செய்யக்கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

அரச படையினரால் கடத்தி செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவன் சாந்திகுமார் சுதர்சனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழவுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று பகல் 12 முணி முதல் கோட்டை புகையிர நிலையத்தின் முன்பாக இடம் பெறுகின்றது. மகிந்த பாசிச வெறியாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயக்தை மீட்டெடுக்க அனைத்து மக்களையும் இணையுமாறு பல்கலைக்கழக மாணவர் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.