தோழர் குமாரின் மனித உரிமைகளைக் கோரும் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
-
13 Feb 2015
- Hits: 662
தோழர் குமாரை நாடு கடத்துவதற்கு தற்போதுள்ள மைத்திரி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக கடந்த 02.02.2015 அன்று தோழர் குமார் குணரத்தினம் சார்பில், கொழும்பு சுப்ரீம் கோட்டில் அடிபடை மனித உரிமைகளைக் கோரும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படுமென்று கூறப்பட்டது. கடந்த 10ம் திகதி கூடிய உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுப்பது குறித்து இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. இன்று கூடிய உயர் நீதிமன்றம் மீண்டும் தோழர் குமாரினது வழக்கினை விசாரணைக்கு எடுப்பது குறித்து எதிர்வரும் 18ம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், அடிப்படை மனித உரிமைகளைக் கோரும் மனு மீதான விசாரணை செய்யும் முடிவை சுப்ரீம் கோட் எடுக்கும் வரையான காலத்தில், தோழர். குமார் குணரட்ணத்தை கைது செய்யவோ அல்லது நாடு கடத்தவோ முயற்சிக்கக் கூடாதென அரசுக்கு சும்ரீம் கோட் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கடந்த 5ம் திகதி முதல் முன்னிலை சோசலிசக் கட்சியினராலும் தோழமை அமைப்புக்களாலும் ஜனநாயக சக்திகளினாலும் தோழர் குமார் குணரத்தினத்தினை நாடு கடத்த மைத்திரி அரசு திரைமறைவில் செயற்படுவதனை கண்டித்தும்; தோழர் குமாரினதும், புலம்பெயர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களினதும் இலங்கையில் அரசியல் செய்யும் உரிமையினை உறுதிப்படுத்தவும் தொடர்ச்சியான போராட்டங்கள் நாடு முழுவதும் மற்றும் ஜரேப்பிய நாடுகளில் இலங்கை தூதராலயங்களின் முன்னாலும் பரவலாக நடைபெற்றுக் கொண்டுள்ளன.