Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களை ஏமாற்றிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்

கூட்டு ஒப்பந்த ஏமாற்றுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆரம்பிப்பதற்கான பொதுக்கூட்டம் இன்று மாத்தளையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இன்று முதல் மலையகம் முழுவதுமாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தில் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளை கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர்கள் இவ்வேலைத்திட்டத்தில் பங்கு பற்றி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், பொருளாதார ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பு, தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி, முன்னிலை சோசலிசக்கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, செங்கொடிச்சங்கம், சோசலிசக்கட்சி, சக்சர, மலையக மக்களின் காணி வீட்டுரிமைக்கான மக்கள் அமைப்பு, பொருளாதார ஆராய்ச்சிக்குழு, தேசிய கலை இலக்கிப்பேரவை ஆகிய அமைப்புக்களின் ஒத்துழைப்புடன், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புகளுக்கு 0779839164