Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

மாட்டு மூத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்துமா!?

கொரோனாவை வெங்காயம் கட்டுப்படுத்தும் என்றால், உள்ளி கட்டுப்படுத்தும் என்றால், இஞ்சி கட்டுப்படுத்தும் என்றால், பெருங்காயம் கட்டுப்படுத்தும் என்றால், மஞ்சள் வேப்பிலை தொடங்கி தமிழ் வைத்திய முறைகள் கட்டுப்படுத்தும் என்றால், இந்து வாழ்க்கை முறைகள் கட்டுப்படுத்தும் என்றால், காவிகளின் மாட்டு மூத்திரமும் கட்டுப்படுத்தும். இந்து காவி பாசிட்டுகள் கூறும் மாட்டுச் சாணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்கள் எப்படிப்பட்ட அறிவியல் உலகத்தில் இருந்து சிந்திக்கின்றோம் என்பதற்கு, இவைகளே சான்று.

கொரோனாவைத் தடுக்க மாட்டு மூத்திரத்தைக் குடி, மாட்டுச் சணத்தை பூசு என்று இந்திய ஆளும் காவிகளின் காட்டுக் கூச்சலுக்கு இடையில், வைரஸ் நுழைந்திருக்கின்றது. அறிவியல் ரீதியாக பகுத்தாய முடியாத காட்டுமிராண்டிச் சமூகத்தில் மட்டும் கூறக் கூடிய வழிமுறைகளையும், தீர்வுகளையும் முன்வைக்கின்றவர்களே – மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவுகளை இன்று எடுக்கின்றனர். அறிவியல் ரீதியான மருத்துவத்தை மக்களுக்கு வழங்குவதையோ, முன்னெச்சரிக்கையாக வைரஸ்சை தடுப்பது குறித்தும், பகுத்தறிவுபூர்வமாக அறிவை மக்கள் பெற்றுவிடுவதை தடுக்கும் கூட்டத்தின் மத்தியில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இருக்கின்றது.

அதிகாரத்தில் இருக்கும் இந்தியக் காவிகள் இந்து மதத்தை முன்னிறுத்திய கூச்சலுக்கு மத்தியில், முஸ்லிம் மதவாதிகள் வைரஸ்சுக்கு எதிராக மார்க்கம் பற்றி உளறுகின்றனர். கிறிஸ்துவ மதவாதிகள் சாத்தானைக் கொல்ல இயேசு வந்துவிட்டார் என்று ஆளுக்காள் சன்னதம் எடுத்து ஆடுகின்றனர்.

இப்படி மதக் காட்டுமிராண்டிகளாகவுள்ள மதவாதிகள், மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு வைரஸ்சுக்கும் இடையில் புகுந்து - கொரோனாவை கட்டுக்கடங்காத வீரியமிக்கதாக்க முனைகின்றனர்.

இந்த பின்னணியில் மானிடப் பேரழிவை அதிகம் ஏற்படுத்தும் இடமாக இந்தியாவை வைரஸ் தேர்ந்தெடுக்கின்றது என்பது மிகையான கூற்றல்ல. கொரோனா தொடங்கியது முதல் அதன் தாக்குதிறன் முதல் அதைக் கட்டுப்படுத்திய மனித ஆற்றலை அவதானித்தால், இந்திய மக்களுக்கு இவை சவால் மிக்க காலம்தான். அறிவியலுக்கு புறம்பான சாதி வெறிபிடித்த பார்ப்;பனிய காவிக் கூட்டம் ஆட்சியிலும், சமூக மேலடுக்களிலும் அமர்ந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில், அறிவியலும் அதன் கூறான நவீன மருத்துவமானது அறிவியலுக்கு புறம்பான காவிகளுக்;கு எதிரான போராட்டமின்றி கொரோனாவை எதிர்த்து நிற்க முடியாது.

பிற எந்த நாட்டையும் போல் இந்திய நவீன மருத்துவம் கொரோனாவை மட்டும் எதிர்த்து போராட முடியாது. அறிவியலை மறுக்கும் மதக் காட்டுமிராண்டிகளையும், இனவெறியர்களையும் எதிர்த்துப் போராட வேண்டி இருக்கும்;. இதை மட்டுமல்ல நாட்டு வைத்தியத்தின் பெயரில் கடைவிரிக்கும் வியாபாரிகளையும், கடவுளின் பெயரில் சாமியாடி பிழைக்கும் மோசடி கூட்டத்தையும், இன-மத-சாதி தற்பெருமையை முன்வைத்து உளறிக் கொட்டும் அறிவியலுக்கு புறம்பான கூறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கின்றது.

தொட்டாலே தீட்டு என்ற பார்ப்பனிய சிந்தனையிலான சாதிவெறிச் சமூகத்தில், மருத்துவம் முற்றாக ஒடுக்கும் சாதிய வெறியர்களின் கைகளில் இருப்பதால் - வைரஸ் பரவுவதற்கு ஏற்ற இடமாக இந்தியா இருக்கின்றது. சாதித் தீட்டுக்கு கவசம் போட்டுக் கொண்டு அணுகுகின்ற இந்திய மருத்துவ முறையானது, வைரஸ்சை தடுக்கப் போராட முன் தங்கள் சாதித் தடைகளை களைந்தால் தான் முன்னேற முடியும். இது தான் எதார்த்தம்;.

இந்திய மருத்துவமும், மருத்துவ மனைகளும் கிராமப்புறங்களில் கிடையாது. சேரிகளால் நிரம்பிக் கிடக்கும் நகரங்கள். மருந்தும், மருத்துவமும் பணம் இருப்பவனுக்கு மட்டும் தான் என்ற இந்தியக் கொள்கை. வைரஸ் செழிப்பதற்கு எற்ற மண்ணாக இருக்கின்றது.

சீனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடு, ஆனால் சீனாவை விட மூன்று மடங்கு மக்கள் அடர்த்தியாக வாழ்கின்ற அதேநேரம், உலகில் அதிக ஏழைகளைக் கொண்டு நாடு. தனியார் தாராளமயமானது அரச மருத்துவமுறையை செயலற்றதாக்கியுள்ள சூழலில், தனியார் மருத்துமனைகள் சுயநலம் பிடித்த சமூக பொறுப்பற்ற மாபியாக் கும்பல்களின் மருத்துவமாக குறுகிக் கிடக்கின்றது. இந்தப் பின்னணியில் மத வெறிபிடித்;த ஊழல் நிறைந்த அரசும் - அதிகார வர்க்கமும் நிறைந்த சூழலில், வைரஸ்சுக்கு தான் கொண்டாட்டம்.

காவிகள் மாட்டுக்கு முகமூடி கட்டும் கூத்துக்கள் ஒருபுறம், மாட்டு மூத்திரத்தை மக்களுக்கு குடிக்கக் கொடுக்கும் வக்கிரமும், சாணத்தை பூசி விடும் கேலிக் கூத்துகள் மத்தியில், நவீன மருத்தவமே போலியானது என்று கூறும் அறிவியல் மறுப்பு கூட்டத்துக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. நவீன மருத்துவ அறிவியலானது எச்சரிக்கை விடுத்த உண்மை கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது.

மேற்கு ஏகாதிபத்தியத்தின் தாளத்துக்கு தாளம் போடும் காவி காப்பரேட் கூட்டம், மேற்கில் தனிமைப்படுத்தினால் தான் தப்பிப் பிழைக்க முடியும் என்று காலம் கடந்த தனிமைப்படுத்தும் முறையை அறிவித்தவுடன், இந்தியக் காவிகள் அவசரமாக தங்கள் எஜமான் வழியில் வாலை ஆட்டிக் கொண்டு மக்களை தனிமைப்படுத்தல் குறித்து அறிக்கைகளை விடத் தொடங்கி இருக்கின்றனர்.

சீனாவில் ஆரம்பித்த வைரஸ் தொற்றை அனுபவரீதியாக கற்றுகொள்ள முடியாத மேற்கு, பாரிய மனித பலியிடலைத் தொடங்கி இருக்கின்ற இன்றைய சூழலில், இந்தியாவில் காலம் கடந்து தனிமைப்படுத்தல் பற்றி பிதற்றத் தொடங்கி இருக்கின்றனர்.

ஆனால் எதாhத்தம் என்ன? இந்திய மக்களின் மேல் கடுகளவு கூட அக்கறையற்ற காப்பரேட் காவிகளின் மருத்துவக் கொள்கையானது, நவீன மருத்துவ அறிவியலை மக்களுக்கு மறுத்து அவர்களுக்கு மாட்டையும் மாட்டு மூத்திரத்தையும் காட்டியது, காட்டி நிற்கின்றது. அதேநேரம் பணக்கார கும்பலுக்கு தாராளவாத தனியார்மய நவீன மருத்துவத்தை வழிகாட்டியது, வழி காட்டுகின்றது. இன்று வைரஸ் இதை முட்டுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி, மரணத்தை தொடக்கி வைத்திருக்கின்றது.