Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கையெழுத்து போராட்டம்!


நாட்டில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும்,கடத்தப்பட்டு காணாமல் போன அனைவரையும் விடுவிக்குமாறு கோரி கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்றை மக்கள் கண்காணிப்பு குழு  நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

 


மாலை 3மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து பெற்றும் வேலைத் திட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி அனைவரும் கையெழுத்திடும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளார்.