Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

டென்மார்க் புத்தக வெளியீட்டு செய்தி – (படங்கள் இணைப்பு)

கடந்த சனிக்கிழமை 15/09/2012 டென்மார்க் கொல்ஸ்ரபரோ நகரில் "நனவெரிந்த சாம்பல்" கவிதை தொகுப்பு வெளியீடும், முன்னணி இதழ்கள், "குழந்தையும் தேசமும்", "தமிழ் பெறும் கணணி" மற்றும் "காலம் மாறுது" இறுவட்டு அறிமுகங்களும் இடம்பெற்றன.

 இந்த நிகழ்வில் 100 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், அங்கு இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் பங்கு கொண்டு தமது கருத்துக்களை மிகவும் ஆரோக்கியமான வகையில் பகிர்ந்து கொண்டனர். புலம்பெயர் தேசத்தில் நிகழ்ந்த நல்ல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றென கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் கூறிச் சென்றார்கள். இந்த அரசியல் கலந்துரையாடல் குறித்த ஒலிப்பதிவினை விரைவில் எமது இணையத்தளத்தில் கேடகலாம்.