Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

altதாம் எதிர்நோக்கிவரும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு நிர்வாக அதிகாரியை வலியுறுத்தி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று (21) காலை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விடுதி வசதிகள் இல்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாய பீடத்தின் இரு பட்டப்படிப்பு கற்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சில பாடநெறிகளுக்கு காலம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.