Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் இ.கா.சூடாமணி அவர்களின் இறுதி யாத்திரை (படங்கள் இணைப்பு)

பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரும் மூத்த தோழரும் புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து போராட்டத் தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தலைவரும் புதிய பூமி – புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஐம்பத்தைந்து வருடகால அரசியல் பணியில் பல் வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவரும் முன்னுதாரணம் மிக்க கம்யூனிஸ்ட் போராளியுமான தோழர் இ.கா.சூடாமணி கடந்த 29-03-2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.

அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01-04-2013 அன்று புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம் பெற்று பூந்தோட்டம் பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.