Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை அராஜக அரசே! லலித், குகன் இருவரையும் உடன் விடுதலை செய்க!!

கோத்தபாயாவின் வெள்ளைவான் கும்பல்களினால் கடத்தி செல்லப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கும் சமஉரிமை இயக்க தோழர்களான லலித, குகன் இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியத்தற்காக இவ்விரு தோழர்களும் அரச குண்டர்படைகளால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு இரகசியமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் இராணுவத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்காக நியாயம் கேட்ட மருத்துவர் சிவசங்கர் “மெண்டல” என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தோழர்கள் லலித், குகன் இருவருக்குமாக தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. ஆனால் அரக்க குணம் கொண்ட அரசு அவர்களை விடுதலை செய்ய மட்டுமல்ல அவர்கள் தங்கள் காவலில் இருப்பதைக்கூட தெரிவிக்க மறுத்து வருகின்றது.

அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை வெள்ளைவானில் கடத்துவதன் மூலமோ அல்லது சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதன் மூலமோ தமது அராஜகத்தை தொடரலாம் என அரசு கனவு காண்கிறது. ஆனால் சர்வாதிகாரிகளுக்கு இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ள தவறுகின்றனர்.

மக்களே!

* அரஜாகத்திற்கு எதிராக தமிழ், சிங்கள மக்கள் ஜக்கியமாக போராடுவோம்!!.

* தோழர்கள் லலித் குகன் ஆகியோரை விடுதலை செய்ய குரல் கொடுப்போம்!!.

-தோழர் பாலன்