Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உள்ளே நவிபிள்ளை கலந்துரையாடல் யாழ். நூலகத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம்! (காணொளி இணைப்பு)

altயாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமற்போனாரின் உறவினர்கள் இன்று (27) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காணாமற்போன தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கோரி இவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.