Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது

எழுக தலைமுறையே

நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள்

நித்தம் வலியைச் சுமப்பவர்கள்

வதையோடு வாழ்பவர்கள்



விடுதலைக்காய் பல்லாயிரமாய் வித்தாகிப்போனவர்கள்

நினைவுகள் இடித்துநொருக்கப்படுகிறது

நெஞ்சத்தில் எரியும் நெருப்பை

யாரால் அணைக்கமுடியுமென இடித்துச்சொல்லுவோம்

புலி அழிந்தாலும்

புதிய மக்கள்பாதை திறந்துகிடக்கிறது

சேர்ந்து நடப்போம்

தமிழர் சிங்களவர் முஸ்லீம்

மலையகப்பேதமகற்றிச் சேர்ந்துநடப்போம்

விடியலிற்காய் மாற்று வேறில்லை

சேர்ந்து நடப்போம்

செங்கொடியில் திரழ்வதற்கு உறுதியேற்போம்!!

18/05/2012