கோத்தபாயவின் வெள்ளைவான் படையணியும், பாசிசத் தம்பி பசிலின் நகைப்பும்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
11 Apr 2012
- Hits: 2154
மகிந்த பாசிசம் அதிசயம் ஒன்றை இலங்கை மக்களிற்கு காட்டியிருக்கிறது. குடும்பசர்வாதிகாரம் நாட்டை ஆள்கிறது. தமக்கெதிரான எந்த அசைவுகளும் கண்காணிப்பிற்கு உட்பட்டே இருப்பதாயும் சொல்லப்படும் எச்சரிக்கை தான் முன்னிலை சோசலிசக் கட்சி தோழர்களின் கடத்தல்.
பின்னர் நாடு கடத்தலும், விடுவிப்பும் புதைகுழியை நோக்கி பாசிசம் நகரத் தொடங்குகின்ற ஆரம்பம்.
இதைத்தான் பாசிசத்தம்பி பசில் “கடத்தல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நகைச்சுவையாக மாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்”. போர்க்குற்றவிசாரணைக்கு இறையாண்மை பற்றி பேசுகின்ற பாசிசப்பக்தர்கள் இங்கு அடங்கி போனதன் சூட்சுமத்தை எண்ணி ஒட்டு மொத்த இலங்கை குடிமக்களும் சிரிப்பது பாசிசத்துக்கு புரியவாபோகின்றது.
--முரளி 11/04/2012