Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

காமக்காட்டேரிகளிற்கு வாய்ப்பாக்கிப்போன யுத்தப்பேரழிவு

யுத்தப்பேரவலம் ஏற்படுத்திய இழப்புகளும் வலியும் உளவியல் ரீதியாக யுவதிகளையே பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. மர்மமான மரணங்களும் தற்கொலைகளுக்குள்ளும் யுத்தத்தால் பெற்றோரை கணவனை உறவுகளை இழந்த யுவதிகளின் பொருளாதார நிலையும் பாதுகாப்பற்ற இராணுவமயமாக்கப்பட்ட சூழலும் புலத்துக் காமக்காட்டேரிகட்கும் வாய்ப்பாகியுள்ள அவலத்தை பாருங்கள்.

16 வயதான யுவதி தனது பெற்றோரை இழந்த நிலையில் உறவினருடனையே வசித்து வந்துள்ளதாகவும், இவர்களுக்கான பண உதவியை 67 வயதான   கனேடியப் பிரஜை மேற்கொண்டு வந்ததாகவும், இந்தக் கிழட்டுக் காட்டேரி உதவி என்ற போர்வையில் யுவதியை விடுதிக்கு கொண்டு சென்றதாயும் செய்திகள் வருகின்றது.


சமூக அக்கறை  கொண்டோரே இந்த பக்கமும் உங்கள் பார்வையை திருப்புங்கள்.

--முரளி 18/04/2012