Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சம்பந்தரும் ரணிலும் சிங்கக்கொடியல்ல, தமிழர் குருதியில் அந்நியக்கொடி பிடித்தனர்

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியை தூக்கச் சொன்னவர்கள், சம்பந்தரை சிங்கக்கொடியை சேர்ந்து பிடிக்கச்சொல்லியிருக்கிறார்கள். ஆம் இதுதான் நடந்தது. இதற்கான விளக்கம் இராஜதந்திர நகர்வாக மக்களிடம் சொல்லப்படலாம். இதைத்தான்

"ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

தமிழ் தேசியத்தினை பிழைப்புக்காக  உயர்த்திப் பிடித்த தழிழ் கட்சிகள் மற்றும் புலிப்பாணியில் கூட்டமைப்பு மக்களை மந்தைகளாக நடாத்தமுனைகிறது.

ஆனால் மக்கள் இந்த மேய்ப்பன்களையும், அமெரிக்க - இந்திய பிதாக்களையும் சரியாகவே தமது சொந்த வாழ்வின் பட்டறிவினூடாக உணரத் தொடங்கியுள்ளனர். இதையே மேதினத்தன்று நடைபெற்ற புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட புரட்சிகர மேதினமானது சுட்டி நிற்கிறது.

--முரளி 05/05/2012