Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சஞ்ஜீவ பண்டாரவை கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் ஆர்ப்பாட்டம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டாரவை கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(20) நாட்டில் 5 முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தற்காலிக  ஒருங்கிணைப்பாளர் சிந்தக ராஜபக்ஷ தெரிவித்தார்.

 இன்று நண்பகல் 12மணிக்கு கொழும்பில் கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால், சப்ரகமுவ- பம்பகின்ன சந்தி, றுகுணு- காலி பஸ்நிலையம் முன்பாக, ரஜரட்ட- மிகிந்தலை சந்தி, பேராதெனிய- கலகா சந்தி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.