மீதொட்டுமுல்ல - சிங்கள, முஸ்லீம் மக்கள் இணைந்து போராட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
08 Apr 2013
- Hits: 1984
பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது மீதொட்டுமுல்ல போராட்டம் தொடர்கிறது!
மீதொட்டுமுல்ல குப்பை மேட்டை அகற்றுமாறுகோரி அப்பிரதேச மக்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் இன்றும் இடம் பெற்றது.இன்று காலையில் அப்பிரதேச மக்கள் நகர அபிவிருத்தி ஆணையர் மற்றும் பிரதிப்பொலிஸ் அதிபர் அனுரசேனாநாயக்க ஆகியோரோடு பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் போது குப்பைமேட்டை அகற்றுமாறு கோரி எழுத்து மூலமான உறுதி மொழி ஒன்றை தறுமாறு பிரதேச மக்கள் விடுத்தகோரிக்கையை நகர அபிவிருத்தி ஆணையாளர் நிராகரித்துள்ளார். அதற்கேற்ப அந்தப்பேச்சு வார்த்தை எவ்வித தீர்மானமும் இன்றி முடிவுற்றது.
சத்தியாக்கிரகத்தை நிறுத்தாவிட்டால் எப்படியாவது அதனை நிறுத்துவதாக பிரதி பொலிஸ் அதிபர் பிரதேச மக்களுக்கு அச்சுருத்தல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.