Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலவச கல்வியினை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் வீதியில் ஆர்ப்பாட்டம்!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுதல் மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச கல்வியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை நான்கு மணியளவில் ஊர்வலமாக சென்று கண்டி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.