Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

எதிர்வரும் வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணிக்கு, கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்தின் முன்பாக பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், அவர்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பங்குகொள்ளவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிகின்றனர். அத்துடன் உழைப்பாளர்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக கோட்டே புகையிரத நிலையத்தின் முன்னாள் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும் கோசங்கள்:

  • பாலஸ்தீனியர்களை வாழ்வதற்க்கு இடம்விடு!
  • ஆள்கொல்லி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட இஸ்ரேல் - ஈராக் - பாலஸ்தீன மக்களே ஒன்றிணையுங்கள்!
  • ஒடுக்கப்பட்ட உலக மக்களே, வாழ்வுக்குப் பதிலாக மரணத்தை உரிமையாக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒன்றிணையுங்கள்!

ஆர்ப்பாட்ட விபரம் :

காலம் : வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணி

இடம் : கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்தின் முன்பாக