Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் "படிப்பகம்" புத்தகக்கடையும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டன! (படங்கள்)

இன்று பிற்பகல் 3 மணியளவில் "படிப்பகம்" புத்தகக்கடையும், நூலகமும் யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 411ம் இலக்க கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டன. இதனை தோழர் சண்முகதாசன் அவர்களின் தலைமையின் கீழியங்கிய கம்யூனிஸ கட்சியில், யாழ் மாவட்டத்தின் முன்னணி  செயற்பாட்டாளர் ஆக இயங்கிய தோழர் இக்பால் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் 100 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கருந்தரங்கில் தோழர் இக்பால், திரு சிறிதரன் (சுகு) திருநாவுக்கரசு, திரு ரெங்கன் தேவராஜன், திருமதி ஞானசக்தி சிறிதரன், திரு கருணாகரன் சிவராசா உட்பட பலர் கருத்துரை ஆற்றினர்.

மேலதிக விபரங்கள் விரைவில்