Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"இனவாதத்தை வீழ்த்தும்"---- மனிதாபிமானம்

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் பல்லாயிரம் மக்களை பதைபதைக்க கொன்ற போது, ஆசியப்பிராந்தியத்தில் வல்லரசுகளின் நுழைவதற்கான திறவுகோலாக மனிதப்படுகொலை பாவிக்கப்படுவதற்காகவே தான் திட்டமிடப்பட்டுள்ளது.

 

கூட்டுச்சதிக்காகவே இந்திய, அமெரிக்க நகர்வுகள் ஜநா அனுசரணையோடு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அமெரிக்க தீர்மானமும் சரி,  சனல்-4இன் காணொளிகளானாலும் தமிழ் மக்களிற்கான தீர்வுக்கான எந்தவொரு துரும்பைத்தன்னும் அசைக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.


பேரினவாதிகளிற்குள்ள எல்லாவற்றிற்கும் மேலான அச்சம், படுகொலைக்காட்சிகள்  சிங்கள மக்களின் கண்களை எட்டிவிடக் கூடாதென்பதே. இதன் ஒரு வெளிப்பாடாகவே --இராணுவம் மற்றும் காவல்துறை தொடர்பான செய்திகளை வெளியிடும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.---எனவே தான் படுகொலை காணொளிகள் சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லப்படுதல் மூலம் மட்டுமே பேரினவாதத்தை வீழ்த்த முடியும்.

-முரளி 13/03/2012