Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

யாரொடு கூடுவோம்... யாரொடு மோதுவோம்... (2)

பெண்கள் படையணி
எங்கள் மண்ணில் நிமிர்ந்தது
வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது
எங்கள் இனத்துப்பெண்
சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள்
கையில் ஏந்திய எறிகணை
காலில் பூட்டிய விலங்கை உடைத்ததோ
போரிட்ட யுவதிகள்
வீரிட்டு அழும் அவலமாய்
சிங்கத்துக் கூரியவாள் நெஞ்சில் பாய்கிறது
யாரொடு மோதுவோம்

Read more ...

பிராந்திய உலக மேலாதிக்க முரண்பாட்டுக்குள் இலங்கை...!

பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நாடுகளின் நலன் சார்ந்தே, இலங்கையின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றது. அதாவது பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கம் சார்ந்த சர்வதேச முரண்பாடுகள், இலங்கைக்குள் பிரதிபலிக்கின்றது. இதில் இருந்துதான் நாம் இன்று எம்மைச் சுற்றிய அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.

Read more ...

'பெடியள் விடமாட்டாங்கள்' என்ற எங்கள் அரசியல்

பெடியளின் மந்தைகளாக வாழப் பழகியவர்கள் நாங்கள். இதற்குள் தான் எமது அறிவும், அறியாமையும் கூட. நாம் முன்னணி இதழை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, 'பெடியள் விடமாட்டாங்கள்' என்ற அரசியல் சூனியத்தை சந்திக்கின்றோம்.

பெடியள், ஐ.நா, மேற்குநாடுகள், இந்தியா, தமிழகம் தொடங்கி பிரபாகரன் ஜெயலலிதா ... என்ற எதிர்பார்ப்புடன் கூடிய அரசியல் நம்பிக்கை, விடுதலையை இலவசமாக எதிர்பார்த்தது, எதிர்பார்க்கின்றது. இதேபோல் எமது முன்னணி இதழையும் அப்படித்தான் கோருகின்றது. முன்னணியை விற்பனைக்கு கொண்டு சென்ற எமது தோழர்களும் இந்த அரசியலுக்குள் தான் பயணித்தனர்.

Read more ...

நாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்..

அவர்கள் ஐரோப்பா ஆக்கிரமிக்கப்படுகிறது என்றார்கள். ஒவ்வொரு விவாதங்களிலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், நாளாந்த செய்தி ஊடகங்களிலும் அவர்கள் தான், அவனிடம் கூறினார்கள் 'நோர்வே ஆக்கிரமிக்கப்படுகின்றது.., ஐரோப்பா இஸ்லாம் மயமாகின்றது பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் எல்லாவற்றிலும் அவர்கள் வாய்கிழிய ஆவேசமாக கத்தினார்கள். நோர்வே இஸ்லாம் மயமாகிவிடும். நோர்வேஜிய கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். எழுமின் விழிமின் என்றார்கள். அறைகூவி அழைத்தார்கள். இடதுசாரிக் கட்சிகள் தான், அவர்களுடைய குடிவரவு அகதிக் கொள்கைகள் தான் நாட்டினை நாசப்படுத்துகிறது என்றார்கள். குற்றச் செயல்கள் யாவுமே ஊற்றெடுப்பது இந்த வேற்று நிறங்கொண்டவர்களால் தான் என்றார்கள்.

Read more ...

மாற்றொன்று இல்லையேல் மக்கள் விரோதம் தொடரும்!

சும்மா சொல்லப்படாது, மகிந்தா மகிந்தாதான்..! மகிந்த சிந்தனை மகத்தான சிந்தனைதான்..! முழு உலகமும் சுற்றி நின்று எதிர்த்தாலும், சுழன்று சுழன்று எதிர்த்தாடுகின்றார். சனல் 4-ல் நான் சர்வதேசக்குற்றவாளி என்றால், என் சனல் 5-ஐயைப் பார். அதில் நான் குற்றவாளியென்ற குறிப்பேதுமுண்டோ..? என முறைக்கின்றார்..! முள்ளிவாய்க்காலில் சரணடைய வந்தவர்களை, நாமா சாகடித்தோம்..?

Read more ...

யுத்தத்தின் பின்பும், இனவாதமே அரசின் கொள்கை..!

யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.

Read more ...

விடுப்பு! (சிறுகதை)

எல்லாரும் கொஞ்சம் சத்தம் போடாமை.., கொஞ்சம் அமைதியாய் இருங்கோ.., இப்ப வந்து பேசப்போறாங்கள். ஏதோ எங்களை நாகரீகம் தெரியாத பட்டிக்காட்டு சனங்கள் எண்டு நினைச்சுப் போடுவாங்கள். வெளிநாடென்று வந்து இன்னும் திருந்தேல்லை போலைக் கிடக்கு.., ஏதோ எங்கடை நல்ல காலத்துக்கு நிக்கிற டொக்ரரும் ஆரோ தமிழ்ப்பிள்ளை போல இருக்கு.., அவதான் பெரிய டொக்டர் போல தெரியுது.., என அங்கு நின்ற எல்லோரையும் சமாதானப்படுத்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் சுவிஸ் மாமன்.

Read more ...

வன்முறையை உருவாக்குவது அதிகாரவர்க்கமே..!

இன்று ஐரோப்பிய மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சந்ததியினரிடம் முஸ்லீம் எதிர்ப்புச் சிந்தனையும், கருத்துக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இது எல்லா வெளிநாட்டவர் மீதுமான எதிர்ப்பு அலையாக இருந்தபோதும், குறிப்பாக முஸ்லீம் மீதான எதிர்ப்பாகத்தான் பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறுசிறு அளவில் காணப்பட்ட இந்தவகை எதிர்ப்பு உணர்வுகள், தற்போது பேருருக்கொண்டு வன்முறையாக மாறியுள்ளது.

Read more ...