Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

உரிமையை பெற்றுக் கொள்ள ஒன்றுபடுவோம்!

யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையும், வடக்கில் நடக்கும் இராணுவ நிர்வாகமும். இந்த இராணுவ நிர்வாகத்தின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறன. கடத்தல், காணாமலாக்கள், கொலை செய்தல், பயமுறுத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்று உதாரணங்களை கூற முடியும். அவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களின் கலாச்சார உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இராணுவ பலவந்தத்தை பயன்படுத்தி வடக்கு மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படையாகும்.

இந்த பலாத்காரத்திற்கு சிறந்த உதாரணமாக இருப்பது, கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் செயற்பாட்டாளர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறை. மாணவர் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் நான்கு மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் ஜனநாயகத்திற்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஜனநாயகத்திற்கு முரணான தான்தோன்றித்தனத்திற்கு எதிராக பலம்வாய்ந்த மக்கள் சக்தியை கட்டியெழுப்ப வேண்டும்.

சில முதலாளித்துவ அரசியல் கட்சிகள் இந்த நிலைமையை பயன்படுத்தி இனவாதத்தையம் மதவாதத்தையும் பரப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றன. இனவாதம் எமது சமூகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்கால சந்ததியினருக்கு மீண்டும் அந்த அழிவை பரிசாகக் கொடுக்க எங்களால் முடியாது.

எங்களது மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான பாதை, தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களினதும் ஒற்றுமையிலேயே இருக்கின்றது. உரிமைகளை பெற்றுக் கொள்வதாயிருந்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட வேண்டும். இனவாதமும் மதவாதமும் மக்களை பிரிக்கிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமூக உரிமைகள் இருப்பதாக நம்பிக்கை வைத்திருக்கும், அதற்காக குரல் கொடுக்க முன்வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தே சம உரிமை இயக்கம் கட்டியெழுப்பப்பட்டது. நாங்கள் எல்லோரும் இந்த ஜனநாயகத்திற்கு முரணான நிலைமைக்கு எதிராக ஒற்றுமையாக இணைவோம். போராடுவோம்!

வடக்கு- கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்கு!

அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

கைது செய்த யாழ் பல்கலைக் கழக் மாணவர் தலைவர்களை விடுதலை செய்!

வடக்கில் நடக்கும் காணிக் கொள்ளையை உடன் நிறுத்து!

கடத்தல், காணாமலாக்களை நிறுத்து!

சம உரிமை இயக்கம்

வாசித்துவிட்டு ஏனையவர்களக்கு கொடுக்கவும்

எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்

400/2, தலவத்துகொட பாதை, மாதிவெல, கோட்டே

0714966738, 011-2799432