Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"சம உரிமை இயக்கத்திற்கு" கண்டியில் நேற்று அச்சுறுத்தல்! (படங்கள்)

சம உரிமை இயக்கத்தினால் நேற்று(16) கண்டியில் கையெழுத்து வேட்டை இடம் பெற்றது. பெரும் அச்சுறுத்தலுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் மக்கள் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய மாகாணசபை உறுப்பினர் துஷார குணரத்ன மற்றும் அவரது குழுவினர் சம உரிமை இயக்கத்திற்கும் கையெழுத்திட்ட மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவை எதையும் பொருட்படுத்தாத மக்கள் உத்வேகத்துடன் கையெழுத்திடுவதை படங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. பிற்பகல் 3 மணியில் இருந்து 5 மணிவரை கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ ஆட்சி மற்றும் அரச ஆதரவுடனான காணிக்கொள்ளை என்பவற்றை உடனடியாக நிறுத்தும் படி கோருவதே இக் கையெழுத்து வேட்டையின் பிரதான நோக்கமாகும்.

இந் நாட்டில் இனவாத்தை தோற்கடித்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைக்க இந்த வேலைத்திட்டம் நாடு பூராவும் மேறகொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.