Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

இத்தாலியின் சமவுரிமை இயக்கத்தின் அங்குரார்பண நிகழ்வு (படங்கள் இணைப்பு)

இத்தாலியின் வட பகுதியில் உள்ள வேறோனா நகரில் சமவுரிமை இயக்கத்தின் அங்குரார்பண நிகழ்வு  24.03.2013 அன்று நடைபெற்றது. அதில் தோழர்கள் ஸ்ரீஹரன், விஜித்த, றோகித்த ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றினார். மேலும்  இத்தாலிய இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அளவில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.