Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நோர்வே சம உரிமை கூட்டம் (படங்கள் இணைப்பு)

நோர்வே சமவுரிமை இயக்க அங்குரார்பண மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம்  நேற்று வியாழக்கிழமை 28.03.13 அன்று ஒஸ்லோவில் நடைபெற்றது.  லோரன்ஸ்ஸ்கொக் பிரதேச மண்டபத்தில் நடைபெற்ற கூட்டடத்திற்கு தோழர் தங்கன் தலைமை தாங்கினார். தோழர்கள் சிறிகரன், ஜவன், குமார்  உரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம், சமவுரிமை இயக்கத்தின் கோட்பாட்டியியல்  அடிப்படை, நடைமுறையில் இலங்கையில் எவ்வாறு இனவாதத்துக்கு  எதிராக சமவுரிமை இயக்கம், சிங்கள மக்களிடையே பிரசார வேலைகளை முன்னெடுகின்றது போன்ற விடயங்களை விளக்கினார். தோழர் ஐவனின் நன்றியுரையுடன் நிறைவு பெற்ற நிகழ்வில் பல தரபட்ட அரசியல் குழுக்கள், அமைப்புகள் சார்பின் அவற்றின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது சிறப்பாக குறிப்பிட தக்க விடயம்.