Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஜரோப்பாவில் சமஉரிமை இயக்கத்தின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்!

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சமஉரிமை இயக்கம், ஜரோப்பாவில் கூட்டங்கள் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்துள்ளது.

டென்மார்க்கில் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை கோல்ஸ்ரபரோ நகரில் பொதுக்கூட்டம் கலந்துரையாடலுடன் இலங்கையர்களின் ஒன்று கூடல் நிகழவிருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் லண்டன் கரோ நகரில் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் 15ம் திகதி ஞாயிறு நிகழவிருக்கின்றது.

பிரான்ஸில், பரிஸ் நகரில் 22ம் திகதி ஞாயிறு சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை ஒட்டிய பொதுக் கூட்டமும் கலந்துரையாடலும் நிகழவிருக்கின்றது.

இலங்கையிலிருந்து சமஉரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் ஸ்கைப் மூலம் உரை நிகழ்த்துவதுடன் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றவுள்ளனர்.