Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28.05.2015 பிற்பகல் 3:30 மணிக்கு  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் மூவின மக்களும் இணைந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர். இதில் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் உறவுகளும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியது.