“சகல கடத்தல்கள், காணாமலாக்கல்களை வெளிப்படுத்து” டென்மார்கில் சமவுரிமை இயக்கம் போராட்டத்திற்கு அழைப்பு
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
10 Dec 2015
- Hits: 1180
எதிர்வரும் சனி 12/12/2015 அன்று டென்மார்க்கிலுள்ள கொல்ஸ்ரபரோவ் நகரசபைக்கு அருகில் காலை 10 மணி முதல் சமவுரிமை இயக்கம் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களிற்கு எதிராக முன்னெடுக்க இருக்கின்றது.
“இப்போதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்!”
“இப்போதாவது காணாமலாக்கல்களை கடத்தல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!”
“அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!”
“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”
மேலுள்ள கோசங்களை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறுகின்றது.
மனித உரிமையாளர்கள், ஜனநாயகவாதிகள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இலங்கை ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கான எமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவிக்க, இலங்கை அரசின் மனித உரிமைகளிற்கு எதிரான பதாகைகளுடன் திரண்டு வந்து உங்கள் ஆதரவினை இந்த போராட்டத்திற்கு வழங்குமாறு அழைக்கின்றேம்.
சமவுரிமை இயக்கம்
டென்மார்க் கிளை