Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் தலையிட்டு தமிழரை அழிக்கக் கோரும் கருணாநிதி

இலங்கை விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருக்கின்றதாக கூறி மு.கருணாநிதி குற்றஞ்சாட்டுகின்றார். அமெரிக்கா இலங்கையிலே தமிழ் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து அதிருப்தி வெளியிட்டுள்ள போதும், பக்கத்திலே உள்ள இந்தியா பாராமுகமாக இருப்பது உலகத் தமிழர்களுக்கெல்லாம் வேதனையை தருகின்றதாம்.

இந்தியா தலையிட்ட போதெல்லாம் தமிழர்கள் அழிக்கப்பட்டதே கடந்த வரலாறு. மீண்டும் தமிழர்களை அழிக்காமல் இருப்பதே உலகத் தமிழர்களுக்கெல்லாம் வேதனையாக இருப்பதாக கூறி, கருணாநிதி ஒப்பாரி வைக்கின்றார்.

ஈழத் தமிழர் மீதான அக்கறை என்பது, இந்தியாவின் மேலாதிக்கத்தை நிறுவுவதைத் தாண்டி, கருணாநிதியின் அரசியல் வேறுபட்டதல்ல. இதுவே தான் மு.கருணாநிதியின் குற்றச்சாட்டு பித்தலாட்டம் அம்பலமாக்குகின்றது.